88929 25504
 
  • Total Visitors: 3752475
  • Unique Visitors: 310036
  • Registered Users: 35966

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

தேவாங்க புராணம்

 

நன்றி : worldkovil.com/?page_id=58

நன்றி : பிரணவி

 

சிவபெருமான் ஆணைப்படி, பூவுலகில் ஆமோத நகரை ஆட்சி செய்துவந்த வீரருத் திரனுக்கு மகனாகப் பிறந்தார் தேவலர். தேவசாமையன் என்று பெயரிடப்பட்டு, தேவ தாசன் என்றழைக்கப்பட்டார். தேவாங்கரின் பூர்வஜென்ம மனைவியான தேவதத்தை வங்கநாட்டு அரசனின் மகளாகப் பிறந்து, இப்பிறவியிலும் தேவதத்தை என்றே பெயரிடப்பட்டாள். உரிய வயதில் தேவதாசர்- தேவதத்தை திருமணம் நடைபெற்றது. அவர்களின் இல்லறம் நல்லறமாகத் திகழ்ந்தது. இறைவன் அருளால் அவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு விருபாட்சன் என்று பெயரிட்டனர்.

தேவதாசர் சைவத்தைப் பரப்புவதையே தன் கடமையாகக் கொண்டிருந்தார். அவருடைய முயற்சியால் நாடு முழுவதும் சிவ தீட்சை, சிவ போதனை, சிவலிங்கத் தாரணம் போன்றவை பரவின. சிவநெறியின் மேன்மையை மக்கள் உணர ஆரம்பித்தனர். சைவம் தழைத்து வளர வளர பிற மதங்களின் செல்வாக்கு குன்றியது.

சைவ சமயம் செழித்தோங்கக் காரணமாய் இருந்த தேவதாசர்மேல் புத்த மதத்தினர் கோபம் கொண்டனர்.

“சிவபெருமான் எங்கும் இருக்கிறார்’ என்ற கொள்கையை கேலி செய்த பௌத்தர்கள் தேவதாசரிடம் ஒரு எறும்பைக்காட்டி, “”இதில் உங்கள் சிவன் இருக்கிறாரா? இருந்தால் காட்டுங்கள்” என்றனர். தேவதாசர் ஈசனை மனமுருகி வேண்டினார். அப்போது எறும்பு, “”என்னிலும் சிவன் இருக்கிறார்” என்றது! தேவதாசர் தன் மாயசக்தியால் எறும்பைப் பேசவைத்திருக்கிறார் என்று கூறிய பௌத்தர்கள், அதனை நம்ப மறுத்தனர். அவர்கள் தேவதாசரிடம், “”நீங்கள் வணங்கும் இராமேஸ்வரம் தலத்திலுள்ள ஸ்ரீஇராமலிங்கேஸ்வரர் பேசினால், சிவபெருமான் எங்கும் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டு, அனைவரும் சைவமதத்தில் இணைந்துவிடுகிறோம்” என்றனர். தேவதாசர் ஈசனைத் தியானித்து நிற்க, சிவலிங்க வடிவிலிருந்து சிவபெருமானின் வாக்கு வெளிப்பட்டது. அதைக்கேட்டுத் திகைத்த பௌத்தர்கள் தங்கள் தவறை உணர்ந்தனர். அவர்கள் அனைவரும் பௌத்த மதத்தைத் துறந்து சைவ மதத்தைச் சார்ந்து சிவபெருமானை பக்தியுடன் வழிபட ஆரம்பித்தனர். தேவதாசரை குரு பீடமாகக்கொண்டு சிவநெறிகளைப் பயின்றனர்.

மக்களின் பசிப்பிணி போக்க தேவதாசர் தொடர்ந்து அன்னதானம் செய்துவந்தார். பெருமளவில் செய்யப்பட்டுவந்த அன்னதானத்தாலும், வரி வசூலிப்பதில் கடுமை காட்டாததாலும் அரண்மனையிலிருந்த செல்வங்கள் குறையத் தொடங்கின. ஒருகட்டத்தில் சாதாரண நிலைக்கு வந்துவிட்டார் தேவதாசர். இந்நிலையில் ஒருநாள், அந்தணர்கள் பலர் தேவதாசரிடம் சென்று தங்களுக்கு உணவிடும்படி வேண்டினர். அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக கங்காதரன் என்னும் வியாபாரியிடம் சென்றார் தேவதாசர். ஏற்கெனவேதனக்குத் தரவேண்டிய தொகையை இன்னும் தராததால், புதிதாகப் பொருட்களைத் தர வியாபாரி மறுத்துவிட்டார். அன்னதானப் பணிக்கு சோதனை வந்ததே என்ற வருத்தத்துடன் திரும்பினார் தேவதாசர். கணவரின் வேதனையைக் கண்ட தேவதத்தை, “”சுவாமி, கலங்கவேண்டாம். அந்தணர்களுக்கு உணவு பரிமாற வழியொன்றுள்ளது. நமது மகன் விருபாட்சன் சங்கு, சக்கரம், பத்மம் ஆகிய ரேகைகளைக் கொண்டு பிறந்தவன். அரண் மனைக்குப் பின்புறமுள்ள பாம்புப் புற்றில் விருபாட்சன் கைவிட்டால், சிவபெருமான் புற்றிலுள்ள நாகராஜன் மூலம் அவன் கையில் பொன் கங்கணம் கட்டுவார். அதிலுள்ள பொன்னைக்கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவிடலாம்” என்றாள்.

 

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2014/jan/devangu1.jpg

அதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த தேவதாசர், தன் மகனிடம் தனக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையைக் கூறி பாம்புப் புற்றுக்குள் கைவிடுமாறு சொன்னார்.

தந்தையின் அன்புக்கட்டளையையேற்ற விருபாட்சன் சிவபெருமானை தியானித்து புற்றில் கையைவிட்டான். அவன் கையை வெளியே எடுத்தபோது, ஒளிபொருந்திய கங்கணம் ஒன்று அவள் கையில் கட்டப்பட்டிருந்தது. ஈசன் அருளை வியந்து வணங்கிய தேவதாசர், அந்தக் கங்கணத்தை எடுத்துக்கொண்டு வியாபாரியிடம் சென்றார். அதைக்கொடுத்து தேவையான பொருட்களை வாங்கிவந்து அனைவருக்கும் உணவு படைத்தார்.

தேவதாசர் தன் குலத்தொழிலான நெசவுத் தொழிலிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். தன் திறமையை உலகோர்க்கு உணர்த்த எண்ணிய தேவதாசர் கலைநயம்மிக்க, அற்புதமான சேலை ஒன்றை உருவாக்கினார். அறுபது முழ நீளமும், 12 முழ அகலமும் கொண்ட அச்சேலை முழுவதும் தங்கச் சரிகையாலும் நவரத்தினங்களாலும் அழகுபடுத்தப்பட்டிருந்தது.

அந்த சேலையை வாங்க மன்னர்களால்தான் முடியும். எனவே பெருஞ்செல்வம் படைத்த தேசிங்க வல்ல மன்னரிடம் அச்சேலையை விற்க முடிவு செய்து தேவதாசர் அவரிடம் சென்றார்.

நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய அந்த அழகிய சேலையைக் கண்டு வியந்த தேசிங்க மன்னன், அதன் மதிப்பைத் தீர்மானிப் பதற்காக அந்நகரிலுள்ள பெரும் துணி வியாபாரிகளை அழைத்துவரச் செய்தார். அந்த சேலையைக்கண்டு வியந்த வியாபாரிகள் அதன் மதிப்பைக் கூறமுடியாமல் திகைத்தனர்.

அந்த நிலையில் ஒரு வியாபாரி, “இந்தச் சேலைக்கு மூவுலகையும் ஈடாகத் தரலாம்’ என்ற கருத்தைத் தெரிவிக்கும் குறியீடாகத் தனது மூன்று விரல்களைக் காண்பித்தார்.

அப்போது அவர்கள் எதிர்பார்த்திராத அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. எங்கிருந்தோ வந்த விஷ்ணு சக்கரம் வியாபாரியின் மூன்று விரல்களையும் துண்டித்துச் சென்றது.

இந்த சேலைக்கு எந்த உலகமும் ஈடாகாது என்று தெய்வமே உணர்த்தியதாகவும், தாங்கள் தெய்வக்குற்றம் செய்துவிட்டதாகவும் உணர்ந்த வியாபாரிகள் அஞ்சினர். “சிவ பரம்பொருளுக்கே அன்றி மானிடர்க்கில்லை இச்சேலை’ என்று முடிவு செய்தனர். பிறகு தேவதாசர் அந்த அற்புதச் சேலையை சிவபெருமான் ஆலயக் கொடிக் கம்பத்தில் கட்டுவதற்கு அர்ப்பணித்தார். அன்றைய தினம் மாசி மாத மகா சிவராத்திரி நாள்.தேவதாசர் அளித்த காணிக்கையில் திருப்தியுற்ற சிவபெருமான் அவருக்கு குபேர சம்பத்து அருளினார். இறைவனின் ஆணைப்படி சைவ சமயத்தைப் பரப்பும் பணியைத் தொடர்ந்து செய்து வந்த தேவதாசர், அன்னதானப் பணியையும் சிறப்பாகச் செய்துவந்தார். அவரது முயற்சிகளுக்கு அவ்வப்போது சோதனைகளும் ஏற்பட்டன.

தேசிங்க வல்லவன் என்ற மன்னன் பௌத்த சமயத்தைச் சார்ந்திருந்தான். அவன் மனைவி சங்கம்மா தேவி சைவ சமயத்தைச் சார்ந்து, சைவ சமயக் கொள்கைகளையே பின் பற்றி வந்தாள். சங்கம்மா தேவியை பௌத்த மதத்திற்கு மாறும்படி மன்னன் எவ்வளவு எடுத்துக்கூறியும் அவள் மனம் மாறவில்லை.

ஒருசமயம் பௌத்த குரு ஒருவர் மன்னனின் அரண்மனைக்கு வந்திருந்தார். மன்னன் அவரிடம் தன் மனைவியின் மனதை மாற்றி, அவளை பௌத்த மதத்தைத் தழுவும்படி செய்யவேண்டும் எனக் கோரினான். மதகுரு ராணியிடம் பௌத்த மதத்தின் சிறப்புக்களை எவ்வளவோ எடுத்துக்கூறினார். ஆனால் அவரது போதனைகளை அவள் ஏற்கவில்லை. மக்களை சைவ சமயத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்யும் முயற்சியில் தேவதாசர் தீவிரமாக இருந்தார். பௌத்த மதமே சிறந்தது என்ற முடிவில் மன்னன் உறுதியாய் இருந்தான். எனவே இரு சமயத்தாரிடமும் அவ்வப்போது வாக்குவாதங்களும் கருத்து வேறுபாட்டால் சச்சரவு களும் எழுந்தன.

இதன் காரணமாக மன்னன் சைவம், பௌத்தம் இரண்டிலும் எது சிறந்தது என்று முடிவுசெய்ய விரும்பினான். இதனை நிரூபிக்க தேவதாசருக்கும் பௌத்த குருவுக்குமிடையே சோதனை ஒன்றை நடத்த திட்டமிட்டு, தேவதாசரை தன் அரண்மனைக்கு வரவழைத்தான். தேசிங்க வல்லவன் யாரும் அறியாதபடி ஒரு குடத்திற்குள் பாம்பை விட்டு, குடத்தின் வாயைதுணியால் இறுகக்கட்டி அவர்கள் முன்னிலையில் வைத்தான்.

“”குடத்தினுள் என்ன இருக்கிறது என்பதை யார் சரியாகச் சொல்கிறார்களோ அவரே வெற்றி பெற்றவர். அவ்வாறு வெற்றி பெற்றவரின் மதத்தைத் தோற்றவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று மன்னன் கூறினான்.

“”குடத்தினுள் பாம்பு இருக்கிறது” என்றார் பௌத்த குரு. “”பாம்பணிந்த சிவபெருமான் இருக்கிறார்” என்றார் தேவதாசர். குடத்தை மூடியிருந்த துணியை விலக்கியபோது, அதற்குள் சிவலிங்கம் இருந்ததைக் கண்டு மன்னன் திகைத்தான். சிவனே முழுமுதல் பரம்பொருள் என்னும் உண்மையை உணர்ந்த மன்னன் தேவதாசரைப் பணிந்தான்; சைவ சமயத்தைத் தழுவினான். பௌத்த குருவும் மற்ற பௌத்த மதத்தினர் அனைவரும் சைவ சமயம் சார்ந்தனர்.

நாடு முழுவதும் சைவம் தழைத்தது.

பின்னர் ஆமோத நகர் திரும்பிய தேவதாசர் தனது மகன் விருபாட்சனுக்கு மன்னனாக முடிசூட்டி, சைவகுரு பட்டத்தையும் அளித்து, தன்னை தெய்வ வழிபாட்டில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

தலங்கள்தோறும் புண்ணிய தீர்த்தமாடி அங்குள்ள மூர்த்திகளை வழிபட்டு வந்தார். கடைசியில் சிறப்புமிக்க சிவத்தலமான ஸ்ரீசைலம் வந்தடைந்தார். ஸ்ரீசைலம் பன்னிரண்டு ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்று. தேவதாசர் அங்கு தங்கியிருந்து அத்தல மூர்த்தியான மல்லிகார்ஜுனரை வழிபட்டுவந்தார். மாசி மாத சிவராத்திரி விழா ஸ்ரீசைலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். சிவராத்திரி நாள் ஒன்றில் தேவதாசர் துவஜாரோகணம் செய்து விழாவைத் துவக்கி வைத்து, அன்றிரவு நான்கு யாமங்களும் விழித் திருந்து முறைப்படி வழிபாடு செய்தார்.

தேவதாசரின் வழிபாட்டில் திருப்தியுற்ற இறைவன் அம்மையுடன் காட்சி தந்து, “”அன்பனே, நீ வேண்டும் வரம் யாது?” என்று கேட்டார். தேவதாசர், “”பெருமானே, அடியேன் கட்டும் திருக்கோவிலில் சௌடாம்பிகை அம்மையோடு தாங்கள் எழுந்தருளி கோவில் கொண்டு, எங்கள் குலமக்களைக் காத்து ரட்சிக்க வேண்டும்”

என வேண்டினார். இறைவனும் அவ்வாறே வரமருளினார்.

தேவதாசர் அங்கிருந்து ஆமோத நகர் சென்று அழகிய பெரிய கோவில் ஒன்றை ஆகமமுறைப்படி கட்டுவித்தார். சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் செய்து, இறைவனையும் இறைவியையும் எழுந்தருளச் செய்து, இறைவனுக்கு இராமலிங்கநாதன் என்றும், இறைவிக்கு இராமலிங்க சௌடேஸ்வரி என்றும் பெயரிட்டு இருவரையும் பக்தி சிரத்தையுடன் வழிபட்டார்.

ஈசனின் ஆணைப்படி தேவலப் பரம் பொருளானது தேவலர், கமலாட்சன், புட்பதத்தன், வேதாளம், வரமுனி, தேவசாலி என ஆறு பிறவிகள் எடுத்து ஏழாவது பிறவியில் தேவதாசராகத் தோன்றியது. தனக்கு இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட ஏழு பிறவிகளும் முடிந்ததையும், சிவபெருமான் தனக்கிட்ட பணிகளைத் தான் திருப்திகரமாக நிறைவேற்றிவிட்டதையும் எண்ணி மகிழ்ச்சியடைந்த தேவதாசர் தன் மனைவியுடன் கயிலை சென்று இறைவனடி தொழுது நின்றார்.

சிவபெருமான் அவர்கள் இருவரையும் ஆசீர்வதித்து, இனி மானுடனாகப் பிறவாத தேவநெறியை அருளி ஆட்கொண்டார்.

 

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2013/dec/devagu-puranam.jpg

 

 

         கவிரத்னன் சைகை மூலம் கூறிய பதில்களுக்கான விளக்கத்தை வரமுனி கூறிய போது, கலாவதியும் அவையோரும் ஆச்சரியம் கொண்டனர்.

கலாவதியின் முதல் கேள்விக்கு, தனது குருவிடம் தான் முதலில் பயின்றது நான்கு வேதங்கள் என்பதைக் குறிக்க நான்கு விரல்களையும்; இரண்டாவது கேள்விக்கு ஆறுவித சாஸ்திரங்களைப் பயின்றதைக் குறிக்க ஆறு விரல்களையும்; புராணம், தர்ம சாஸ்திரம், மீமாம்சம், சந்தஸ் என்ற நான்கையும் பயின்றதைக் குறிக்க மேலும் நான்கு விரல்களையும் கவிரத்னன் காட்டியதாக வரமுனி விளக்கமளித்தார்.

இதையெல்லாம் கேட்ட கலாவதி, உண்மையில் கவிரத்னன் தன்னைவிட அதிக ஞானம் பெற்றுள்ளவன் தான் என்றெண்ணி, அவனைத் திருமணம் செய்துகொள்ள தனக்கு சம்மதமென்று தன் தந்தையிடம் தெரிவித்தாள். கவிரத்னனை கணவனாக அடைவதற்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந் தோமோ என்றெண்ணி மகிழ்ந்தாள்.

திருமணத்திற்கான ஏற்பாடுகளை கோலாகலமாகச் செய்ய ஆரம்பித்தான் மன்னன்.

உஜ்ஜயினி நகரமே விழாக்கோலம் பூண்டது. விருந்தும் கேளிக்கையும் மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஒரு நல்ல முகூர்த்தத்தில் கவிரத்னன்- கலாவதி திருமணம் நடந்தேறியது.

அன்றிரவு அந்தப்புரத்தில் படுக்கையறைக்கு இனிய உணர்வுகளுடன் சென்ற கலாவதி, அங்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கவிரத்னனைக்கண்டு மிகுந்த ஏமாற்றமடைந்தாள். களைப்பில் உறங்குவதாகக் கருதி, அவனை எழுப்புவதற் காக வீணையை எடுத்து மீட்டினாள். வீணைஒலிக்கும் எழுந்திராமல் அவன் அசைவின்றி உறங்கிக் கொண்டிருந்தான். அடுத்த முயற்சியாக கலாவதி சந்தனக் குழம்பில் குளிர்ந்த பன்னீரைக் கலந்து கவிரத்னன்மீது தெளித்தாள். எப்போதும்ஆட்டுக்கிடைகளுக்கிடையிலேயே படுத்துறங்கிப் பழகிப்போன கவிரத்னன், தான் படுத்திருப்பது அந்தப்புரம் என்பதை மறந்து, ஆடுகள் தன் தூக்கத்தைக் கெடுப்பதாக எண்ணித் தரமற்ற வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தான்.

கவிரத்னன் தூக்கத்தில் கூறிய வார்த்தைகளும் அவனது செய்கைகளும் கலாவதியை திடுக்கிட வைத்தன. அவளுக்கு கவிரத்னன் உண்மையான கவிஞன்தானா என்ற சந்தேகம் எழுந்தது. உடனே கலாவதி தன் தோழிகளை அழைத்து, அவர்களிடம் தன் சந்தேகத்தைக் கூறினாள்.

கலாவதியும் அவள் தோழிகளும் பேசிய சப்தத்தில் விழித்துக்கொண்ட கவிரத்னன், தன்னெதிரே கோபமாக நின்றுகொண்டிருந்த கலாவதியைக் கண்டு திடுக்கிட்டு, தன்னைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் அவளிடம் கூறிவிட்டான்.

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2013/dec/devagu-puranam1.jpg

கவிரத்னன் கூறியவற்றைக் கேட்ட கலாவதி தான் வரமுனியால் ஏமாற்றப்பட்டதை அறிந்து வருந்தினாலும், வயதிலும் அறிவிலும் சிறந்தவரான முனிவரைத் தான் அவமானப்படுத்தியது தவறு என்பதை உணர்ந்தாள். மனம் திருந்திய கலாவதி கவிரத்னனை மன்னித்து ஏற்றுக் கொண்டு, அவனை உண்மையான கவிஞனாக மாற்றவேண்டுமென்று முடிவு செய்தாள்.

கலாவதியை ஏமாற்றியதற்காக கவிரத்னனும் மனம் வருந்தினான். அவனை சமாதானப்படுத்திய கலாவதி, அவன் சிறந்த கல்வி ஞானம் பெற வேண்டுமெனில், நகரக் காவல் தெய்வமான காளிதேவியின் அருளைப் பெறவேண்டும் என்று கூறி, அதற்கான வழிமுறைகளையும் கூறி காளி கோவிலுக்கு அனுப்பி வைத்தாள்.

அவள் கூறியபடி இர வில் காளி கோவிலுக்குச் சென்ற கவிரத்னன், நகர்க் காவலுக்கு வெளியே சென்றிருந்த காளி திரும்பி வருவதற்குள், கோவிலுக்குள் சென்று கதவை உட்புறமாகத் தாழிட்டுக்கொண்டான். நகர்வலம் முடிந்து திரும்பி வந்த காளி கோவிலின் கதவு தாழிடப்பட்டிருப் பதைக் கண்டு கோப மடைந்து, “”யார் உள்ளே, கதவைத் திற!” என அதட்டினாள்.

காளிதேவியின் கோபக்குரலைக் கேட்டு பயத்துடன் கதவைத் திறந்த கவிரத்னன் அவள் கால்களில் விழுந்து வணங்கி, “”தாயே! என்னை மன்னித்துவிடு. என் பெயர் கவிரத்னன். ஆனால் 
என் பெயருக்கேற்ப நான் கவிஞனே அல்ல. எனக்கு எழுதப் படிக்கக்கூட தெரியாது. எனவே எனக்குக் கல்வி ஞானமும் கவிபாடும் ஆற்றலும் அளித்து, என்னை உண்மையான கவிஞனாக்கி அருள்புரியவேண்டும்” என்று வேண்டினான்.

கல்வியறிவு பெறவேண்டுமென்ற அவனது ஆர்வத்தை மெச்சிய காளிதேவி, தன் காலடியில் வீழ்ந்துகிடந்த கவிரத்னனை எழுப்பி, “”உன்னுடைய நாக்கை நீட்டு” என்றாள். பயத்துடன் வாயைத் திறந்த கவிரத்னனின் நாக்கில் தன்னுடைய சூலத்தால் எழுதிய காளிதேவி, “”நீ உலகில் எவராலும் வெல்ல இயலாத கவிஞனாக விளங்கி “மகாகவி’ என அழைக்கப்படுவாய்” என வரமருளி மறைந்தாள்.

காளிதேவி தனக்களித்த வரத்தினால் மிக்க மகிழ்ச்சியடைந்த கவிரத்னன், தனக்கு கல்வி ஞானம் அளித்த காளிதேவியைப் போற்றி அப்போதே பல பாடல்களைப் பாடினான். காளிதேவியின் அருளைப் பெற்ற கவிரத்னன் பின்னாட்களில் உலகம் போற்றும் சிறந்த கவிஞனாகி, மகாகவி காளிதாசன் என அழைக்கப்பட்டான்.

காளிதாசன், கலாவதியின் இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகக் கழிந்தது. அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கவீந்திரன் என்று பெயரிட்டு வளர்த்தனர். காளிதேவியின் அருளால் கவீந்திரனும் சாஸ்திரங்கள், கலைகள் அனைத்திலும் தேர்ந்தவனாய் விளங்கினான்.

ஆணவம் கொண்ட கலாவதியை தன் மதிநுட்பத்தால் வென்று அவளது ஆணவத்தை அடக்கியதோடு, கல்வி அறிவில்லாத ஒருவனை மகாகவி காளிதாசனாக மாற்றிவிட்ட திருப்தி யுடன் வரமுனி போஜராஜன் அரண்மனை திரும்பினார்.

போஜராஜன் அரசவையில் வரமுனி குருபீடமாகத் திகழ்ந்தார். வரமுனியிடம் மரியாதையும், பெரும் மதிப்பும் கொண்டிருந்த மன்னன் அவரிடம் வேதாந்தத் தத்துவங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித் தான். ஈசன் வரமுனிக்கு இட்ட பணியும் அது தானே. மன்னன் போஜராஜனின் விருப்பத்தை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட வரமுனி, அவனுக்கு அனைத்தையும் போதித்தார். முனிவரின் போதனையால் மன்னனின் உள்ளம் மேலும் செம்மையுற்றது.

பூலோகத்தில் தான் ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றிவிட்டதால், தான் கயிலை செல்ல வேண்டிய நேரம் இதுவென்று போஜராஜனிடம் கூறிய வரமுனி, அவனிடம் விடைபெற்றுச் சென்றார். பின்னர் தன் மனைவி தேவதத்தையுடன் கயிலை சென்று சிவவழிபாட்டில் ஈடுபட்டார்.

சிவபெருமான் அருகிருந்து அவர் திருவடிகளைப் போற்றி வணங்கிவந்த தேவாங்கர், அடுத்து சிவபெருமானின் கட்டளை பிறக்கும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

வரமுனி இயற்றிய நூல்களைக் கற்றவர்கள், குருவின் துணையோடு சிவயோகத்தை முறையாகப் பயின்று பலன்காண விரும்பினர்.

பிரம்மபுத்திரர்களாகிய சனகர், சனந்தனர், சனாதர், சனற்குமாரர் ஆகிய நால்வரும், குருவால் உணர்த்தப்பெற்றாலன்றி கற்ற கல்வி பயனில்லாமல் போகும் என்பதை உணர்ந்து, திருக்கயிலை சென்று சிவபெருமானிடம், “”சற்குருவே, வேதாகமங்களைக் கற்றிருந்தும் எங்களால் அவற்றின் உட்பொருளை அறியமுடியவில்லை. அவற்றை உணர்த்தி உபதேசிக்க வல்ல குரு ஒருவரைத் தாங்கள் எங்களுக்குத் தந்தருள வேண்டும்” என வேண்டினர்.

சிவபெருமான் அவர்களது வேண்டு கோளையேற்று, தேவாங்கரை அழைத்தார். “”உன் வம்சத்தில் தோன்றி ஆமோத நகரை ஆண்டுவரும் சுகுணனின் மகனாகப் பிறந்து, சிவயோக நெறியை முனிவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உணர்த்தி மீண்டும் என்னை வந்து அடைவாயாக” என்றருளினார். ஈசனது கட்டளையையேற்ற தேவாங்கர் பூலோகம் செல்லத் தயாரானார்.

தேவாங்கரின் வம்சத்தில் தோன்றிய சுகுணனுக்கு நெடுநாட்களாக குழந்தைப்பேறு கிட்டவில்லை. அதனால் கவலையுற்ற மன்னன், பல தலங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டுவர முடிவு செய்து, நாட்டை அமைச் சர்களிடம் ஒப்படைத்துவிட்டு பயணத்தைத் தொடங்கினான்.

முதலில் காசிக்குச் சென்று விசுவநாதர், விசாலாட்சியை வணங்கி, தொடர்ந்து பல தலங்களுக்கும் சென்று முடிவில் இராமேஸ் வரம் வந்தடைந்தான். இராமலிங்கேஸ்வரரை வணங்கி, இராமேஸ்வரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீர்த்தங்களில் நீராடி, புனித தீர்த்தங்களை ஆமோத நகர் கொண்டு வந்தான். மன்னனை அரசியும் அமைச்சர்களும் மக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்று வணங்கினர்.

இறைவன் அருளால் அரசிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தேவாங்கரே அவர்களுக்கு மகவாய்த் தோன்றினார். குழந்தைக்கு தேவசாலி என்று பெயரிட்டு வளர்த்தனர். சாஸ்திரங்கள், கலைகள் அனைத்தையும் கற்றறிந்த தேவசாலி மக்கள் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிகளை உணரும் வண்ணம் வாழ்ந்து வந்தார். உரிய வயதில் தேவசாலிக்குத் திருமணம் செய்துவைத்து, ஆட்சிப் பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு மன்னன் தன் மனைவியுடன் வனவாசம் மேற்கொள்ளச் சென்றான்.

தேவசாலி, தன்னை குருவாக ஏற்று வந்தவர்களுக்கெல்லாம் அட்டாங்க யோகத்தை விளக்கமுறக் கற்பித்து, நல்லொழுக்கத்தையும் போதித்தார். தானே ஒரு யோகியாக வாழ்ந்து வந்த தேவசாலி மக்கள் நலன் காக்கும் சிறந்த மன்னனாகவும் திகழ்ந்தார்.

சமண சமயம் நாடெங்கும் பரவ ஆரம்பித்த காலம் அது. தேவசாலி சமண சமயத்தை எதிர்த்து சைவ மதத்தைப் பரப்ப நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். சைவ சமயத் தத்துவங்களையும் அவற்றை விளக்கும் கதைகளையும் மக்களை ஈர்க்கும் வகையில் பிரசாரம் செய்து வந்தார்.

அவரது பேச்சும் செயல்பாடுகளும் மக்களை சைவ சமயத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தது.

அவர் கல்யாணபுரி என்ற நகரத்தை வந்தடைந்தார். அந்த நகரத்து மன்னன் சமண சமயத்தை ஆதரிப்பவன். அவனது மகன் ஜயதேவன்சைவ சமயத்தின்மீது ஈடுபாடு கொண்டு தேவசாலியிடம் தீட்சை பெற்று சிவனடியார் ஆனான். இதனை விரும்பாத மன்னன் மகன் ஜயதேவனை சமண சமயத்திற்குத் திரும்பும்படி வற்புறுத்தினான். ஆனால் அவன் தன் கொள்கையில் உறுதியுடன் இருந்ததால், அவனை சிறையில் அடைத்தான் மன்னன்.

ஒருநாள் தேவசாலி ஜோதி வடிவிலான சிவபெருமானை தியானம் செய்து கொண்டிருந்தபோது, ஜயதேவன் சிறைவைக்கப் பட்டிருப்பதை ஞானதிருஷ்டியால் அறிந்தார். சிவபக்தன் ஒருவனுக்கு இந்த நிலை ஏற்பட் டதே என்று வருந்தினார். தன் தவவலிமையால் விலங்குகளையும் பறவைகளையும் படை வீரர்களாக உருவாக்கி, கல்யாணபுரியை முற்றுகையிடச் செய்து மன்னனை வென்று ஜயதேவனை மீட்டுவரச் செய்தார்.

ஜயதேவனை சிறையிலடைக்கக் காரணமாய் இருந்த சமணர்கள்மீது கோபம் கொண்ட தேவசாலி அவர்களை சபிக்க முயல, சிவபக்தர்களில் தலையாயவரான நந்திதேவர், “”சமணர்கள் எதிர்காலத்தில் சைவமதத்தையே தழுவுவார்கள் என்று சிவபெருமான் கூறியுள்ளார். எனவே அவர்களை சபிக்க வேண்டாம்” என்று தேவசாலியிடம் கூறினார். அதனை ஏற்றுக் கோபம் தணிந்த தேவசாலி, ஜயதேவனை கல்யாணபுரி மன்னனாக முடிசூட்டினார்.

தன் அவதார நோக்கம் முடிவடைந்ததால், தேவசாலி தேவாங்கராக மாறி, தன் மனைவியுடன் கயிலை சென்று அம்மையப் பனை வணங்கி வந்தார்.

உலகில் பல மதங்கள் தோன்றின. மதபேதங்கள் கிளைத்து சமய வாதங்களும் பூசல்களும் தோன்றின. சைவ சமயத்தின் புகழ் மீண்டும் குன்ற ஆரம்பித்தது. அன்பும், அருளும் மறைந்து அறியாமை இருள் உலகெங்கும் நிரம்பியிருந்தது.

அனைத்துலக சஞ்சாரியான நாரதர் இதைக்கண்டு மனம் வருந்தி திருக்கயிலை சென்றார். சிவபெருமானை வணங்கி, “”பெருமானே, உலகில் பல மதங்கள் தலைதூக்கியிருப்பதால், மக்கள் செய்யத்தக்கவை எவை- செய்யத்தகாதவை எவை என்றறியாமல் குழப்பமடைந்துள்ளனர்.

அவர்களுடைய குழப்பத்தைப் போக்கி நன்னெறிப்படுத்தவும், சைவத்தை தழைத் தோங்கச் செய்யவும் அருள்புரிய வேண்டும்” என வேண்டினார்.

நாரதரின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் தன்னருகில் வீற்றிருந்த தேவாங்கரை அழைத்து, “”தேவலனே, நீ மீண்டும் பூலோகம் சென்று, உன் வம்சத்தில் தோன்றியுள்ள வீரருத்திரனின் மகனாகப் பிறந்து, வங்க நாட்டு மன்னனின் மகளாகப் பிறக்கும் தேவதத்தையை மணந்து சிறப்புடன் வாழ்வாயாக. சிறந்த சிவபக்தனாகத் திகழ்ந்து, சைவ நெறியை பூவுலகில் நிலைபெறச் செய்து மீண்டும் எம்மிடம் வருவாய்” என பணித்தார்.

இறைவனின் கட்டளையை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட தேவாங்கர், இறைவனை வணங்கி விடைபெற்றார்.

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2013/nov/devangu-puranam.jpg

          நயவஞ்சகனான ஞானசீல முனிவனின் தீய எண்ணத்தை விக்கிரமாதித்தனுக்குக் கூறிய புட்பதத்தன், அவனை வெற்றி கொள்வதற்கான வழியையும் கூறினான். 

தேவலோகத்திலிருந்து வந்த விமானத்தில் புறப்படும்முன், விக்கிரமாதித்தனுக்கு உறுதுணையாய் இருக்க ஒரு மந்திர வேதாளத்தை அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு, மனைவி தேவதத்தையுடன் புட்பதத்தன் தேவலோகம் சென்றான்.

விக்கிரமாதித்தன் மந்திர வேதாளத்தைக் கட்டிச் சுமந்துகொண்டு காளி கோவிலுக்குச் சென்றான். அவர்களைக் கண்டதும் மகிழ்ந்த முனிவன், வேதாளத்தைக் கட்டிப்போட்டுவிட்டு, விக்கிரமாதித்தனை கோவில் குளத்தில் குளித்துவிட்டு வரச்சொன்னான். குளித்துவிட்டு வந்த விக்கிரமாதித்தனை காளிதேவி முன் தலைகுனிந்து வணங்கும்படி முனிவன் கூறினான். அப்போது விக்கிரமாதித்தன், புட்பதத்தன் கூறியிருந்தபடி, “”முனிவரே, நான் இதுவரை யாரையும் தலைகுனிந்து வணங்கியதில்லை. அதனால் தலைகுனிந்து வணங்குவது எப்படியென்று செய்துகாட்டுங்கள். அதைப் பார்த்து நானும் செய்கிறேன்” என்றான். 

அதை உண்மையென்று நம்பிய முனிவன் வணங்குவதற்காகத் தலைகுனிந்தபோது, விக்கிரமாதித்தன் தன் மந்திர வாளால் அவன் தலையை வெட்டி காளிதேவியின் முன்பிருந்த பலி பீடத்தில் வைத்தான்.

காளிதேவி தன்னை வணங்கி நின்ற விக்கிரமாதித்தன்முன் தோன்றி, உலகம் முழுவதையும் அவன் ஒரு குடையின் கீழ் ஆள வரமருளி, பெருஞ்செல்வத்தையும் வேறு பல வரங்களையும் அளித்து மறைந்தாள்.

அதன்பின்னர் விக்கிரமாதித்தன், புட்பதத்தன் தனக்களித்த மந்திர வேதாளத்தை அழைத்துக்கொண்டு உஜ்ஜயினி மாநகரம் சென்றடைந்தான்.

சாபம் பெற்று பல ஆண்டுகள் வேதாளமாகக் காட்டில் வசித்து சாப நீக்கம் பெற்ற புட்பதத்தன் சுய வடிவில் தேவாங்கராக கயிலை அடைந்து, அங்கு சிவபெருமானின் அருகிலிருந்து அவரை வழிபட்டு வந்தார். தேவாங்கருக்கு மீண்டும் பூலோகம் சென்று ஆற்றவேண்டிய பணி காத்திருந்தது.

பூவுலகில் அறநெறி பிறழ்ந்து, பக்தியும் தெய்வ வழிபாடும் குன்றி, மக்கள் வாழ்வில் துன்பமும், துயரமும் நிறைந்திருந்தன. வேதங்கள் மாறுபாடுற்று சாஸ்திரங்களைப் பின்பற்றுவதில் குழப்பம் ஏற்பட்டது. 

அஞ்ஞான இருள் சூழ்ந்து மக்கள் வாழ்க்கை நிலைகுலைந்தது. இத்துயர நிலையிலிருந்து உலகத்தை மீட்க எண்ணிய தேவர்கள், கயிலை சென்று சிவபெருமானிடம், “”பெருமானே, பூவுலகில் அஞ்ஞான இருள் சூழ்ந்து மக்கள் வாழ்க்கை தடுமாற்றம் அடைந்துள்ளது. 

அதனைச் சரி செய்யவும், வேதங்களைத் திருத்தி அமைக்கவும், ஆகமங்களை ஒழுங்குபடுத்தவும் அருளாளன் ஒருவனை உலகுக்கு அளித்தருள வேண்டும்” என வேண்டினர்.

சிவபெருமான், “”நீங்கள் கவலைப்பட வேண்டாம். எமது மானச புத்திரனை அனுப்பி பூவுலகை மாயையிலிருந்து மீட்போம்” என்று கூறி தேவர்களை அனுப்பிவைத்தார். 

அதன்பின்னர் சிவபெருமான், தேவாங்கரை அழைத்து “”நீ உன் வம்சத்தில் தோன்றிய கங்காதரனுக்கும் சுகுணவாணிக்கும் மகனாய்ப் பிறந்து, வேதங்களைத் திருத்தி, பூவுலகில் நேர்மையும் ஒழுக்கமும் நிலைபெறச் செய்து மீள்வாயாக” என்று ஆணையிட்டார்.
 

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2013/nov/devangu-puranam1.jpg

சிவபெருமான் தனக்கிட்ட பணியை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட தேவாங்கர், எந்த நிலையிலும் தனது உண்மை ஞானம் மாறாமல் இருக்கவும், ஆபத்துக் காலத்தில் தான் நினைக் கும் போதெல்லாம் வந்து உதவவும் ஈசனிடம் வேண்டி விடைபெற்றார்.

ஈசனின் ஆணைப்படி தேவாங்கர், கங்காதரன் மகனாகப் பிறந்து வரருசி என்று பெயரிடப்பட்டார். இவர் வரமுனி என்றும் அழைக்கப் பட்டார். வரருசி அனைத்து கலைகளிலும் வல்லவராகவும், மெய்ஞ்ஞானியாகவும் திகழ்ந்தார். சுசீலன் என்பவரது மகளாய்ப் பிறந்து அமிர்தசீலி என்று அழைக்கப்பட்ட தேவதத்தையை மணந்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஆட்சி பீடத்தில் அமர்ந்த வரருசி, நீதிநெறி தவறாமல் ஆட்சிசெய்து வந்ததுடன், வேதங்களைத் திருத்தி ஒழுங்குபடுத்தி மக்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கும்படி செய்தார்.

வேதங்களைத் திருத்தியமைத்த வரருசி ஆகமங்கள் பலவற்றை இயற்றினார். சாத்திர நிகண்டு, கணித சாத்திரம், சூரிய சித்தாந்தம், சுத்த மீமாம்சம், திரிலிங்க நிகண்டு, பாக சாஸ்திரம், இலட்சண சாத்திரம், ஸ்வர சூத்திரம், தேவாங்க மாலை, ஆயுள் வேதம் ஆகியவை வரருசி எழுதிய நூல்களில் சில. வரருசி தன் அயராத பணியால் மக்களை நல்வழிப்படுத்தி ஒழுக்கமும், சிவநெறியும், தெய்வ பக்தியும், வழிபாடும் எங்கும் நிலைபெறச் செய்தார்.

ஆண்டுகள் பல கடந்ததும், தன் மகன் வீரருத்ரனுக்கு அவந்தி மன்னன் மகள் கோமளையைத் திருமணம் செய்துவைத்து, ஆட்சியை அவனிடம் ஒப்படைத்தார் வரருசி.  பின்னர் பல நாடுகளுக்கும் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வரருசி முனிவர், வரமுனி என்று பெயர் பெற்றார்.

வரமுனி ஒருநாள், மன்னன் போஜராஜனின் தலைநகரான தாராபட்டினம் வந்தடைந்தார். அரண்மனைக்குச் சென்ற வரமுனியை மன்னன் அன்புடன் வரவேற்று உபசரித்து தனக்குச் சமமான இருக்கையில் அமரவைத்து, அவரைப் பணிந்து வணங்கினான்.

வரமுனியின் தெய்வீகத் தோற்றம் கண்ட மன்னனும், சபையோரும் முனிவரைப் பற்றி அறிந்துகொள்ள ஆவல் கொண்டு, அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டனர்.

“”என் பெயர் வரமுனி. அனைத்து சாஸ்திரங்களை யும், கலைகளையும் கற்றுத் தேர்ச்சி பெற்றுள்ள நான், அனுபவரீதியாக உலக விஷயங்களை அறிந்துகொள்வதற்காக பல நாடுகளுக்கும் சென்றுவருகிறேன். இப்போது தாராபட்டினம் வந்துள்ளேன்” என்றார்.

தன் நாட்டுக்கு அவர் வந்திருப்பது தன் தவப்பேறு என்று மகிழ்ச்சி அடைந்த மன்னன், “தன் நாட்டு மக்களுக்கு சாஸ்திரங்களையும், கலைகளையும் கற்பித்தருள வேண்டும்’ என அவரிடம்  பணிவுடன் வேண்டிக் கொண்டான். மன்னனது வேண்டுகோளை ஏற்ற வரமுனி நாட்டு மக்களுக்கு கலைகளைக் குறைவறக் கற்பித்தார். 

வரமுனியிடம் பேரன்பும், மதிப்பும் கொண்டிருந்த போஜராஜன், அவரது பாண்டித்தியத்துக்கு ஏற்றதான செய்தி ஒன்றை அவரிடம் கூறினான். 

“”உஜ்ஜயினி நகர மன்னன் பட்டாச்சாரியன். அவனது மகள் கலாவதி அழகும், அறிவும் நிரம்பியவள். அழகுக்கு இணையாக அவளிடம் அகங்காரமும் இருக்கிறது. தனக்கு நிகர் யாருமில்லை என்று ஆணவம் கொண்டிருக்கும் கலாவதி, “என்னை அறிவால் வெற்றிகொள்பவரையே திருமணம் செய்து கொள்வேன்’ என்ற உறுதியுடன் இருக்கிறாள். 

பல நாட்டு மன்னர்களும் அறிஞர்களும் கலாவதியுடன் அறிவுப் போட்டியில் பங்கேற்று தோல்வியே கண்டனர். அதனால் தனது மகளின் திருமணம் தாமதமாகிக்கொண்டிருப்பதைக் கண்டு மன்னன் பட்டாச்சாரியன் மிகுந்த கவலை கொண்டுள்ளார். தாங்கள் உஜ்ஜயினி சென்று கலாவதியுடன் வாதிட்டு வென்று அவளது ஆணவத்தை அடக்கி வரவேண்டும்” என்று தன் வேண்டுகோளை வரமுனி முன் வைத்தான்.

அதை அவர் ஏற்றுக்கொள்ள, போஜராஜன், வரமுனியின் பயணத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து வழியனுப்பி வைத்தான். அறிஞர் பெருமக்கள் சூழ்ந்து வர வரமுனி உஜ்ஜயினி நகரம் நோக்கிப் புறப்பட்டார்.

வரமுனி உஜ்ஜயினிக்கு வரும் செய்தியை போஜராஜன் பட்டாச்சார்யனுக்கு தூதுவர் மூலம் தெரிவித்திருந்ததால், வரமுனியை மன்னன் நால்வகைப் படைகளோடு நாட்டின் எல்லைக்கே சென்று வரவேற்று உபசரித்து அழைத்துவந்தான். 

அறிவுப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப் பட்டது.

மன்னன் பட்டாச்சார்யனின் அழைப்பை யேற்று பிற நாட்டு மன்னர்களும், அறிஞர்களும் சபையில் கூடியிருந்தனர். போட்டியாளர்கள் இருவரையும் மன்னன், சபையினருக்கு அறிமுகம் செய்துவைத்தான்.

வாதம் ஆரம்பமானது. வேதம், சாஸ்திரம், ஆகமம், புராணம், இதிகாசம், காவியம் என அனைத்திலும் இருவரும் வாதம் செய்தனர். இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காமல் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். என்றாலும் முடிவில் வரமுனியிடம் கலாவதி தோல்வியுற்றாள். தன்னைவிட ஞானம் பெற்றவர் எவரும் இருக்க முடியாது என கர்வம் கொண்டிருந்த கலாவதிக்கு, தான் தோல்வி அடைந்தது ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்தது.
போட்டி நிபந்தனையின்படி கலாவதியுடன் வாதம் புரிவோர் வெற்றி பெற்றால் அவரை கலாவதி திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஆனால் கலாவதி வரமுனியைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததோடு, அவரது தோற்றத்தையும், முதுமையையும் கேலி செய்து பேசி வரமுனியின் மனம் புண்படச் செய்தாள்.

கலாவதியின் கேலிப் பேச்சுக்களைக் கேட்டு மனம் வருந்திய வரமுனி, அவளுக்கு தக்க பாடம் புகட்டி அவளது ஆணவத்தை அடக்க வேண்டும் என எண்ணினார். “”இளைஞனும் அறிஞனுமான என் மகனை கலாவதியுடன் வாதிட்டு வெற்றி பெறச் செய்து, அவளைத் திருமணம் செய்துகொள்ள வைப்பேன்” என்று கூறி சபையைவிட்டு தன் இருப்பிடம் சென்றார்.

தன் மகனாக, கலாவதியுடன் வாதம் செய்ய அறிவில்லாத, அழகனான ஒரு இளைஞனைத் தேட ஆரம்பித்தார் வரமுனி. ஒருநாள் ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனைக் கண்டார். தன் திட்டத்தைச் செயல்படுத்த அந்த இளைஞன் ஏற்றவனாக இருப்பான் என்று கருதி அவனிடம் சென்று அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்டார்.  

“”ஐயா, நான் மாதவாச்சாரியார் என்ற அந்தணரின் மகன். சிறு வயதிலேயே பெற்றோர் இறந்துவிட்டதால் ஜீவனத் திற்காக இவ்வூரிலுள்ள செல்வந்தர்களின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றான் அவன்.

அந்த இளைஞனிடம் கனிவாகப் பேசிய வரமுனி, ஆடு மேய்க்கும் தொழிலை விட்டுவிட்டுத் தன்னுடன் வந்து தன் சொற்படி நடந்துகொண்டால் அவனுக்கு வளமான வாழ்க்கை அமைத்துத் தருவதாகக் கூறினார். அதற்குச் சம்மதித்த இளைஞன், ஆடுகளை அவற்றின் சொந்தக்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டு முனிவருடன் சென்றான். 

வரமுனி இளைஞனுக்குச் சத்தான ஆகாரங்களைக் கொடுத்து திடகாத்திரமான உடலும், கம்பீரமான தோற்றமும் பெறச் செய்தார். அவனுக்கு கவிரத்னன் என்ற பெயரையும் சூட்டினார். 

ஒருநாள் அவர் கவிரத்னனிடம், “”நீ உஜ்ஜயினி நகர இளவரசி கலாவதியுடன் அறிவுப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் அந்த இளவரசியை உனக்குத் திருமணம் செய்து வைப்பேன்” என்று கூறினார். தனக்கு சொகுசான அரண்மனை வாழ்க்கை கிடைக்கப் போகிறது என்ற ஆசையில் கவிரத்னன், முனிவர் சொற்படி நடப்பதாக உறுதியளித்தான்.

வரமுனி தன் மகனுடன் உஜ்ஜயினி வருவதாக மன்னன் பட்டாச்சார்யனுக்குச் செய்தி அனுப்பினார். போட்டியில் பங்கேற்கும்போது விவாத மேடையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை கவிரத்னனிடம் விவரமாகக் கூறி, அவனை நடை, உடை, பாவனைகளில் பெருங்கவிஞனைப்போல் தோற்றமளிக்கச் செய்து, அழகிய பல்லக்கு ஒன்றில் அவனை அமர்த்தி, உஜ்ஜயினி நகருக்கு அழைத்துச் சென்றார். புலவர்களும் அறிஞர்களும் பின்தொடர உஜ்ஜயினி சென்ற வரமுனி விவாத மண்டபத்தை அடைந்தார். 

மன்னனும், மந்திரிகளும், அறிஞர்களும் மண்டபத்தில் கூடியிருந்தனர். கலாவதி விவாத மேடையின் ஒருபுறத்தில் அமர்ந்திருந்தாள். மிடுக்குடன் மண்டபத் திற்குச் சென்ற கவிரத்னன் கலாவதிக்கு எதிர்புறத்தில் அமர்ந்துகொண்டான். வரமுனியும் மேடையில் அமர்ந்துகொண்டார். கவிரத்னனின் தோற்றப் பொலிவைக் கண்ட சபையினர் போட்டியில் அவன் வெல்வது உறுதி என்றே கருதினர்.

போட்டி ஆரம்பமாவதற்குமுன் வரமுனி கவிரத்னனை தன் மைந்தன் என்று சபையோருக்கு அறிமுகம் செய்துவைத்தார்.  அவன் கற்காத சாஸ்திரங்களோ, படிக்காத நூல்களோ இவ்வுலகில் இல்லையென்று கூறி அவனது திறமையை சபையோருக்கு எடுத்துரைத்தார்.

வாதப்போர் தொடங்கியது. கலாவதி, கவிரத்னனின் அறிவை சோதிக்கும் விதமாக வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் போன்ற அனைத்திலும் கேள்விகள் கேட்டாள். கவிரத்னன் அவளது கேள்விகளுக்கு வாயைத் திறந்து பதில் ஏதும் சொல்லாமல் கை விரல்களை நீட்டியும், மடக்கியும் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். கலாவதியின் கேள்விகள் அனைத்திற்கும் இந்த முறையிலேயே அவனது பதில்கள் இருந்தன. அவன் விரல்களால் கூறிய பதில்களைக் கலாவதியால் புரிந்துகொள்ள முடியவில்லை. பதில்கள் புரிந்தால்தானே அவை சரியா? தவறா என்று அறிந்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியும்.

தான் கேட்ட கேள்விகளுக்கு கவிரத்னன் கூறிய பதில்கள் தனக்கு விளங்கவில்லை என்று வரமுனியிடம் கூறிய கலாவதி அவனுடைய பதில்களுக்கு விளக்கம் அளிக்கும்படி அவரிடம் கேட்டாள். அதனை ஏற்று வரமுனி, கவிரத்னன் விரல்களால் கூறிய பதில்களுக்கு விளக்கம் கூற ஆரம்பித்தார். 

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இளைஞனான கவிரத்னன் கூறிய பதில்களுக்கு வர முனியால் விளக்கம் கூற முடிந்ததா? அவை சரியான பதில்கள்தானா?

 

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2013/oct/devangu-puranam.jpg

 

         தேவியிடம் வரம் பெற்றுத் திரும்பிய பட்டி, நேராக விக்கிரமாதித்தனின் அரண்மனைக்குச் சென்றான். உறங்கிக்கொண்டிருந்த விக்கிரமாதித்தனை எழுப்பினான்.

“”2,000 ஆண்டுகள் நான் உயிர் வாழ்வதற்கான வரத்தை அளிப்பதற்கு காளி  தேவி இசைந்துள்ளாள். அதற்கு அனைத்து லட்சணங்களும் பொருந்திய மகாசக்ரவர்த்தி ஒருவனுடைய தலையை தனக்குக்காணிக்கையாக்க வேண்டுமென நிபந்தனை விதித்திருக்கிறாள். இந்த உலகில் தங்களைத் தவிர அனைத்து லட்சணங்களும் கொண்ட மன்னாதி மன்னன் யாருமில்லை. எனவே காளிதேவிக்கு காணிக்கை செலுத்த தங்கள் தலையைக் கொடுக்க வேண்டும்” என்று கூறினான்.

அதைக் கேட்ட விக்கிரமாதித்தன் சற்றும் தயங்காமல், “”உன் விருப்பம் அதுவானால் தாராளமாக என் தலையைக் கொய்து காளிதேவிக்கு சமர்ப்பிக் கலாம்” என்றான்.

அதன்படியே விக்கிரமாதித்தனின் தலையைக் கொய்த பட்டி, அதை காளிதேவிக்கு காணிக்கையாக்கினான். அங்கு பிரசன்னமான காளி, பட்டியின் விருப்பப்படி அவன் 2,000 ஆண்டு கள் உயிர்வாழ வரமருளி, “”வேறென்ன வேண்டும்” என்று கேட்டாள்.

“”அன்னையே, நான் வாழ்நாள் முழுவதும் விக்கிரமாதித்தனுக்கு உறுதுணையாக இருக்க அருளவேண்டும்” என்று வேண்டினான். மனம் மகிழ்ந்த தேவி விக்கிரமாதித்தனின் உடலோடு அவன் தலையைச் சேர்த்து மீண்டெழச்செய்து, அவர்களிரு வரையும் ஆசீர்வதித்தாள்.

ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்ய தேவேந்திரனிடம் வரம் பெற்றிருக்கிறான் விக்கிரமாதித்தன். அதேசமயம் 2,000 ஆண்டுகள் வாழும் வரம்பெற்றதோடு, தன் வாழ்நாள் முழுவதும் விக்கிரமாதித்தனுக்கு உறுதுணையாக இருக்கவும் வரம்பெற்றிருக்கிறான் பட்டி. இது எப்படி சாத்தியம் என குழப்பம் அடைந்த விக்கிரமாதித்தன், தன் சந்தேகத்தைப் பட்டியிடமே கேட்டான்.

மிகுந்த புத்திசாதுர்யம் கொண்ட பட்டி, “”தாங்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கான வரம் பெற்றிருக்கிறீர்கள். அதனால் வருடத்தில் ஆறுமாதம் நாட்டிலிருந்து ஆட்சி செய்யுங்கள். அடுத்த ஆறு மாதம் வனவாசம் மேற்கொள்ளுங்கள். இவ்வாறு செய்துவந்தால் தாங்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்வதும், இரண்டாயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்வதும் சாத்தியமாகும். நானும் என் வாழ்நாள் முழுவதும் தங்களுடன் இருந்து ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கலாம். இதன்மூலம்தேவேந்திரன் தங்களுக்களித்த வரமும், காளிதேவி எனக்களித்த வரமும் நிறைவேறிவிடும்” என்றான்.

அதைக்கேட்டு மகிழ்ந்த விக்கிரமாதித்தன், பட்டியின் அறிவுக்கூர்மையைப் பாராட்டினான்.

அவன் கூறியபடியே விக்கிரமாதித்தன் காடாறு மாதமும், நாடாறு மாதமும் இருந்து, காளிதேவியின் அருளாலும், பட்டியின் உதவியாலும் தேவேந்திரன் அளித்த சிம்மாசனத்தில் அமர்ந்து சிறப்பாக ஆட்சி செய்துவந்தான்.

உஜ்ஜயினி நகரத்திற்கு சிறிது தொலைவில் அடர்ந்த காடொன்று இருந்தது. அந்தக் காட்டில் ஒரு காளி கோவிலும், அங்கிருந்து சற்று தொலைவில் ஒரு முருங்கை மரமும் இருந்தன. அந்த முருங்கை மரத்தில் அற்புத சக்திகள் கொண்ட வேதாளம் ஒன்று வசித்து வந்தது.

எவரொருவர் அந்த வேதாளத்தைத் தன் திறமையினால் வசப்படுத்திக் கொள்கிறாரோ, அவருக்கு அந்த வேதாளம் காலம் முழுவதும் அடிமைப்பட்டு அவர் கூறும் எந்தக் காரியத்தையும் செய்துகொடுக்கும். அதன் துணையுடன் உலகத்து வேந்தர்கள் அனைவரையும் அடக்கியாள முடியும்.

நெடுங்காலமாக அந்தக் காட்டில் வசித்துவந்த ஞானசீலன் என்ற முனிவன், அந்த வேதாளத்தை எப்படியாவது தன் வசப்படுத்தி, பார் புகழும் பெருமையுடன் ஆட்சி செய்துவரும் விக்கிரமாதித்தனை வீழ்த்திவிட்டு, அவன் சிம்மாசனத்தில் அமர்ந்து சக்ரவர்த்தியாகிவிட வேண்டுமென்ற பேராசைக் கனவில் மூழ்கியிருந்தான்.

தன் ஆசை நிறைவேற முனிவன் காட்டிலிருந்த காளிதேவியை நோக்கிக் கடுந்தவம் புரிந்துவந்தான். அவனுடைய தவத்திற்கு மனமிரங்கிய காளிதேவி அவன்முன் தோன்றினாள். காளிதேவியை வணங்கிய ஞானசீல முனிவன், “”வேண்டியவர்க்கு வேண்டியபடி வரமளிக்கும் தாயே, விக்கிர மாதித்த மன்னனை வீழ்த்திவிட்டு, அவனது நவரத்ன சிம்மாசனத்தில் அமர்ந்து உலகின் ஏகபோக சக்ரவர்த்தியாக நான் ஆட்சி புரிய வேண்டும். இதை நான் சாதிப்பதற்கு இந்த முருங்கை மரத்தில் வசிக்கும் வேதாளத்தை அடிமைப்படுத்த வேண்டும். இந்த ஆசைகள் நிறைவேற நீ எனக்கு அருள்புரிய வேண்டும்” என வேண்டினான்.

அதற்கு காளி தேவி, “”முனிவனே, உன் ஆசைகள் நிறைவேற வேண்டுமெனில் சில நிபந்தனைகளை நீ நிறைவேற்ற வேண்டும். முடி சூடிய ஆயிரம் மன்னர்களின் தலையைக் கொய்து நீ வளர்க்கும் வேள்வித் தீயில் இடவேண்டும். முருங்கை மர வேதாளத்தைக் கட்டியிழுத்துவந்து என் சந்நிதி முன் நிறுத்தவேண்டும். இவ்வாறு செய்தால் உன் விருப்பம் நிறைவேறும்” என்று கூறி மறைந் தாள்.

காளியின் தரிசனத்தில் பெரிதும் மகிழ்ந்த ஞானசீலன், அவள் கூறியபடி செயல்படத் தலைப்பட்டான்.

மன்னர்களிடம் சென்று சாதுர்யமாகப் பேசி, தான் செய்யும் யாகத்திற்கு வருமாறு அழைத்து வந்து அவர்கள் தலைகளைத் துண்டித்து வேள்வித் தீயில் இட்டான். இவ்வாறு 999 முடி மன்னர்களின் தலைகளைத் தீயிலிட்டபிறகு, ஆயிரமாவது தலையாக விக்கிரமாதித்தனின் தலையை வெட்டி காணிக்கையாக்கிவிட்டால் தன் எண்ணம் பூர்த்தியாகிவிடும் என்ற மகிழ்ச்சியில் திளைத் தான் ஞானசீலன். விக்கிரமாதித்தனை யாகம் நடைபெறும் இடத்திற்கு வரவழைக்க ஒரு திட்டம் தீட்டினான். விக்கிரமாதித்தனின் கவனத்தை தன்பக்கம் ஈர்ப்பதற்கு, மன்னனிடம் மாதுளங்கனி ஒன்றைக் கொடுப்பதை வழக்கமாக்கிக்கொண்டான்.

ஒருநாள் முனிவன் விக்கிரமாதித்தனைச் சந்தித்து மாதுளங்கனியைக் கொடுக்கும்போது, தற்செயலாக விழுவதுபோல அதைக் கீழே தவறவிட்டான். கீழே விழுந்த மாதுளங்கனி உடைந்து, அதில் முனிவன் பொதிந்து வைத்திருந்த நவரத்தினக்கற்கள் சிதறின. அதைக்கண்டு ஆச்சரியமடைந்த மன்னன், “”முனிவரே, இவ்வளவு விலையுயர்ந்த கற்கள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன?” என்று கேட்டான்.

“”என்னுடைய மந்திர சக்தியால் விலையுயர்ந்த செல்வங்களைத் தோற்றுவிக்க முடியும். உலகப்பற்றுகளைத் துறந்த நான் அவற்றை உம் போன்ற மன்னர்களிடம் கொடுத்துவிடுவேன்” என்றான். அதைக்கேட்ட விக்கிரமாதித்தனுக்கு தானும் மந்திர சக்திகளைப் பெறவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. முனிவன் எதிர் பார்த்ததும் அதைத்தான்.

“”மன்னா, நான் காளிதேவியின் அருளைப் பெறுவதற்காக கோவில்முன் அக்னி குண்டம் அமைத்து யாகம் செய்துவருகிறேன். வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தசியன்று யாகம் முடிவடைகிறது. அன்றைய தினம் கோவிலுக்கு வந்து, தவம் செய்துகொண்டிருக்கும் என்முன்அமர்ந்திருந்தால் உமக்கு அற்புத சக்திகளைக்  கொடுக்கும் மந்திரம் ஒன்றினை உபதேசிக்கி றேன். அம்மந்திரத்தை உச்சாடனம் செய்து நீ பெரும் செல்வத்தைப் பெறலாம்” என்று முனிவன் விக்கிரமாதித்தனிடம் கூறினான்.

அதற்கிணங்கிய விக்கிரமாதித்தன், முனிவன் கூறிய தினத்தில் காட்டிலிருந்த காளிகோவிலுக்குச் சென்றான். அவனை அன்புடன் வரவேற்றான் ஞானசீலன். முனிவனிடம் மரியாதை கொண்டிருந்த விக்கிரமாதித்தன், “”முனிவரே, நான் ஆற்றவேண்டிய பணி ஏதேனும் உளதா?” என்று கேட்டான்.

“”மன்னா, சற்று தொலைவில் முருங்கைமரம் ஒன்றுள்ளது. அதில் வேதாளம் ஒன்று தொங்கிக்கொண்டிருக்கும். அதைப் பிடித்து வந்து காளிதேவியின் முன்னால் நிறுத்தவேண்டும்” என்றான். அதனை ஏற்று விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்துவர காட்டிற்குள் சென்றான். வழியில் பேய்களும், பூதங்களும் விக்கிரமாதித்தன்மீது எலும்புத் துண்டுகளையும் ரத்தம் வழியும் சதைத் துண்டுகளையும் வீசின. அவற்றைத் தன் வாள் வீச்சினால் விரட்டியடித்த விக்கிரமாதித்தன், வேதாளம் வசிக்கும் முருங்கை மரத்தைக் கண்டுபிடித்தான். நீண்ட போராட்டத்துக்குப் பின் அந்த வேதாளத்தைப் பிடித்து, காட்டுக் கொடிகளால் கட்டித் தோளில் சுமந்தவாறு கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அவன் தன்னைத் தூக்கிச் செல்வதற்கான காரணத்தை வேதாளம் கேட்டபோது, ஞானசீல முனிவனின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காகவே வேதாளத்தைத் தூக்கிச் செல்வதாகக் கூறினான். அதைக்கேட்ட வேதாளம், “”மன்னா, யாருக்கும் கட்டுப்படாத நான் உன்னுடன் பணிந்து வரவேண்டுமெனில் வழியில் நீ ஒரு வார்த்தைகூட பேசக்கூடாது. மௌனமாகவே வரவேண்டும். நீ உன் மௌனம் கலைந்து ஏதாவது பேச ஆரம்பித்தால் நான் கட்டுக்களை அவிழ்த்துக்கொண்டு மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வேன்” என்று கூறியது. விக்கிரமாதித்தன் பதிலேதும் சொல்லாமல் வேதாளத்தைச் சுமந்தபடி நடந்து கொண்டிருந்தான்.

சிறிது தூரம் சென்றதும் வேதாளம் விக்கிரமாதித்தனிடம், “”மன்னா, நான் உனக்கு ஒரு கதை சொல்வேன். கதை முடிந்ததும் நான் கேட்கும் கேள்விக்கு நீ சரியான பதில் சொல்லவேண்டும். நீ சரியான பதில் தெரிந்திருந்தும் அதைச் சொல்லாவிட்டால் உன் தலை சுக்குநூறாகிவிடும்” என்று கூறியது.

வேதாளத்தின் கேள்விக்கு பதில் சொல்லா விட்டால் தலைசிதறிவிடும். வாய் திறந்து பதில் சொன்னால் வேதாளம் முருங்கை மரத்திற்குச் சென்றுவிடும். வேதாளத்தின் இந்த தர்மசங்கடமான நிபந்தனைகளை எப்படிச் சமாளிக்கலாம் என்று சிந்தித்தவாறே நடந்துகொண்டிருந்தான் விக்கிரமாதித்தன்.

வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது. ஒவ்வொரு முறையும் கதை சொல்லி முடிந்ததும் வேதாளம் கேட்ட கேள்விக்கு விக்கிரமாதித்தன் சரியான பதிலைக் கூற, அவன் மௌனம் கலைந்ததால் வேதாளம் கட்டுக்களை அவிழ்த்துக்கொண்டு முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. இவ்வாறு வேதாளம் இருபத்தி நான்கு கதைகளைக் கூற, விக்கிரமாதித்தன் சரியான பதிலைக் கூறுவதும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதும் தொடர்ந்தது.

வேதாளம் விடைகாணற்கரிய கதை ஒன்றைக் கூறிவிட்டு கேள்வி கேட்டது. அதற்கான பதிலை யோசித்தவாறு விக்கிரமாதித்தன் சென்றுகொண்டிருந்தான்.

அது நள்ளிரவு நேரம். அப்போது இனிமை யான வீணை இசை காற்றில் மிதந்து வருவதைக் கேட்டான். இந்த நேரத்தில் யார் வீணை வாசிப்பது என்றறிய ஒலிவந்த திசையை நோக்கி விக்கிரமாதித்தன் நடந்தான். ஓரிடத்தில் அழகிய பெண்ணொருத்தி ஒரு கல்லின் மீதமர்ந்து வீணை வாசித்துக்கொண்டிருந்தாள். அவளருகில் சென்ற விக்கிரமாதித்தன், “”அணங்கே, நீ யார்? நள்ளிரவில் தனியாக அமர்ந்து வீணை வாசித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டான்.

“”நான் ஒரு தேவலோக மங்கை. தேவதத்தை என்பது என் பெயர். என் கணவர் பெயர் புட்ப தத்தன். ஒருநாள் கயிலாயத்தில் சிவபெருமான் பார்வதிதேவிக்குக் கூறிய தேவரகசியத்தை என் கணவர் கேட்க நேர்ந்தது. அவர்கள் இருவர் மட்டுமே அறிந்திருந்த அந்த ரகசியத்தை என் கணவர் என்னிடம் கூறிவிட்டதால், கோபம் கொண்ட சிவபெருமான் எங்களைச் சபித்துவிட்டார்.

என் கணவர் பாடலிபுரத்துக்கு அருகிலுள்ள காட்டில் முருங்கை மரத்தில் வேதாளமாக வசித்துக் கொண்டிருக்கிறார். நான் பகல் நேரத்தில் மானாகவும், இரவில் அழகிய பெண்ணாக மாறி வீணை வாசித்துக்கொண்டும் இருக்கிறேன். விக்கிரமாதித்த மன்னன் இக்காட்டிற்கு வரும்போது எங்களை நேருக்கு நேர் சந்திக்கச் செய்வான் என்றும், அப்போது எங்கள் சாபம் நீங்கும் என்றும் சிவபெருமான் சாபவிமோசனம் அருளியுள்ளார். அதனால் நான் விக்கிரமாதித்த மன்னனின் வரவை எதிர்நோக்கி பல ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று அழகிய பெண் வடிவில் இருந்த தேவதத்தை கூறினாள்.

தேவதத்தை கூறியதைக் கேட்ட விக்கிர மாதித்தன், “”பெண்ணே, நீ எதிர்பார்த்துக் காத்திருக்கும் விக்கிரமாதித்தன் நான்தான். நான் உன்னையும் உன் கணவனையும் சந்திக்கச் செய்து உங்களுக்கு சாபவிமோசனம் கிடைக்கச் செய்வேன். இப்போது முனிவர் ஒருவரின் வேண்டு கோளின்படி ஒரு வேதாளத்தைச் சுமந்து சென்றுகொண்டிருக்கிறேன்” என்று கூறினான்.

தன்னுடன் உரையாடிக் கொண்டிருப்பவன் விக்கிரமாதித்தன் என்றறிந்து மகிழ்ச்சி கொண்ட தேவதத்தை, விக்கிரமாதித்தன் சுமந்துகொண்டிருக்கும் வேதாளம் தன் கணவன் புட்பதத்தனாக இருக்குமோ எனச் சந்தேகித்து, வேதாளத்தின் முகத்தைக் காட்டும்படி விக்கிரமாதித்தனிடம் வேண்டிக் கொண்டாள். அவளது வேண்டுகோளை ஏற்று விக்கிரமாதித்தன் வேதாளத்தைத் தரையில் இறக்கிவைத்து அதன் முகத்தை அவளிடம் காட்டினான். தேவதத்தையும் வேதாளமும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டதும் இருவரும் சுயஉருவம் பெற்றனர். புட்பதத்தனைக் கண்டு தேவதத்தை மகிழ்ச்சியடைந்தாள்.

தேவலோகம் புறப்படும்முன் தங்கள் இருவருக்கும் சாபவிமோசனம் கிடைக்க உதவியாய் இருந்த விக்கிரமாதித்தனுக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டுமென விரும்பிய புட்பதத்தன், ஞானசீல முனிவன் வஞ்சக எண்ணம் கொண்ட பேராசைக்காரன் என்பதையும்; அவன் விக்கிரமாதித்தனுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியிருப் பதையும்; அதை முறியடிப்பதற்கான தீர்வையும் கூறிச் சென்றான்.

வஞ்சக முனிவனின் திட்டம் நிறைவேறியதா? விக்கிரமாதித்தன் வென்றானா?
 

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2013/sep/thevangupuranam.jpg

 

          ந்திரசர்மன் இல்லாமல் தனக்கு வாழ்க்கை இல்லையென்று சௌந்தரவல்லியும், அவளைத் திருமணம் செய்துகொள்வதற்கு சாஸ்திரம் இடம்கொடுக்காது என்று சந்திரசர்மனும் வாக்குவாதம் செய்தனர். அப்போது அங்கு வந்துசேர்ந்த அக்கம்பக்கத்தினர், அந்நகரத்து மன்னன் சுத்தவர்மனிடம் முறையிட்டுத் தீர்வுகாணும்படி அவர்களுக்கு ஆலோசனை கூறினர்.

அவ்வாறே இருவரும் மன்னனிடம் சென்று தங்கள் வாதத்தை முன்வைத்தனர். சௌந்தரவல்லி சந்திரசர்மன்மீது மிகுந்த அன்புவைத்திருப்பதையும், சாஸ்திரங்களுக்குக் கட்டுப்பட்ட சந்திரசர்மன்அவளைத் திருமணம் செய்து கொள்ள மறுப்பதையும் அறிந்த மன்னன், அரண்மனை புரோகிதரை அழைத்து அவரிடம் ஆலோசனை கேட்டான்.

“”அந்தண குலத்தில் பிறந்த ஒருவன், அந்தணர் அல்லாத வேறு குலப் பெண்ணை மணந்துகொள்ள வழி இருக்கிறது. அதன்படி அந்த ஆண் ஒரே நேரத்தில் வெவ்வேறு குலத்தைச் சேர்ந்த மூன்று பெண்களையும்; நான்காவதாக ஒரு அந்தண குலப் பெண்ணையும் திருமணம் செய்துகொள்ள சாஸ்திரம் அனுமதிக்கிறது” என்று புரோகிதர் கூறினார்.

அதன்படி சந்திரசர்மனுக்கு தேவதாசிப் பெண்ணான சௌந்தரவல்லி, மன்னனின் மகள் சித்ரரேகை, வைசியகுலத்தைச் சேர்ந்த கோமளவல்லி, புரோகிதரின் பெண் கல்யாணி ஆகிய நால்வருடனும் திருமணம் நடந்தது. மன்னன் அவர்களுக்கு சீர்வரிசைகள் அளித்து, அந்த நகரிலேயே வசிப்பதற்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்தான். அவர்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியுடன் சென்றுகொண்டிருந்தது.

காலப்போக்கில் சந்திரசர்மனின் மனைவியர் நால்வருக்கும் ஆண் குழந்தைகள் பிறந்தன. கல்யாணியின் பிள்ளை வரரிஷி என்ற வல்லவ ரிஷி, சித்ரரேகையின் பிள்ளை விக்கிரமாதித்தன், கோமளவல்லியின் பிள்ளை பட்டி, சௌந்தரவல்லியின் பிள்ளை பத்ரகிரி. இந்த நால்வரும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கினர்.

முதுமை அடைந்திருந்த கன்னியாபுரி மன்னன் சுத்தவர்மன் தனக்கு ஆண் வாரிசு இல்லாததால் ஆட்சிப் பொறுப்பைத் தன் மருமகன் சந்திரசர்மனிடம் ஒப்படைத்தான். நல்லாட்சி செய்துவந்த சந்திரசர்மன் முதுமை எய்தியபோது, தன் புதல்வர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளைச் செய்ய எண்ணி ஒருநாள் அவர்களை அழைத்தான். அவர்கள் தன் தந்தை அழைத்த காரணத்தை அறிய அவரைச் சுற்றி கவலையுடன் அமர்ந்திருந்தனர். சந்திரசர்மன் பத்ரகிரியைத் தன் பக்கத்தில் அழைத்து, அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டு அழுதான். பத்ரகிரியைத் தவிர மற்ற மூவருக்கும் சந்திரசர்மன் அழுவதற்கான காரணம் புரியவில்லை.

பத்ரகிரி தன் தந்தைக்கு ஆறுதல் கூறினான்.

தாசி குலத்தைச் சேர்ந்த சௌந்தரவல்லியின் மகனான பத்ரகிரிக்கு குழந்தைகள் பிறந்தால், அவன் தந்தை சந்திரசர்மனுக்கு சொர்க்கம் கிடைக்காது. இதையறிந்தே அவன் வருந்துகிறான் என்பதை உணர்ந்திருந்த பத்ரகிரி, “”தந்தையே, எனக்குத் திருமணத்தில் விருப்பமில்லை. அப்படியே திருமணம் செய்துகொண்டாலும் குழந்தை பிறக்காமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று உறுதி கூறினான்.

அதைக்கேட்டு சற்று ஆறுதலடைந்த சந்திரசர்மன், “”எனக்கு வயதாகிவிட்டதால் நாட்டுப் பொறுப்பை என் புதல்வர்களாகிய உங்களில் ஒருவருக்கு வழங்கலாமென எண்ணியுள்ளேன். ஆழமாகவும், தீர்க்கமாகவும் சிந்தித்து ஒரு முடிவு செய்துள்ளேன். அதன்படி பத்ரகிரிக்கு முடிசூட்டி அவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளேன்” என்று கூறி, அதற்கான காரணத்தையும் கூறினான்.

“”நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது, அருகிலிருந்து எனக்கு சிகிச்சையளித்து என் உயிரைக் காப்பாற்றியவள் சௌந்தரவல்லி. அவள் கொடுத்த உயிர்ப்பிச்சையினாலும், அவள் என்னை மணந்துகொள்ள விரும்பியதாலுமே மற்ற மூவரையும் நான் மணந்துகொள்ள நேர்ந்தது. எனவே சௌந்தரவல்லியின் மகனான பத்ரகிரியின் குலத்தைப் பற்றி எந்த பேதமும் பாராட்டாமல் அவனுக்கு முடிசூட்ட வேண்டும். அதற்கு சகோதரர்களாகிய நீங்கள் மூவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறினான்.

அவ்வாறே செய்வதாக மற்ற மூன்று சகோதரர்களும் வாக்குறுதி தந்தனர்.

அதன்படி சில நாட்களில் பத்ரகிரிக்கு முடிசூட்டி, அவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தான் சந்திரசர்மன். மற்ற மூவரும் பட்டத்து இளவரசர்களாக இருந்து பத்ரகிரிக்கு ஆட்சியில் உதவி செய்துவந்தனர். புதல்வர்களின் நல்லாட்சியைக் கண்டு மகிழ்ந்த சந்திரசர்மன் ஒருநாள் இறைவனடி சேர்ந்தான்.

இந்த நிலையில், சகோதரர்களுள் ஒருவனான வரரிஷி தவ வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டு, தன் சகோதரர்களிடம் விடைபெற்று தூரதேசம் சென்றுவிட்டான்.

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2013/sep/thevangupuranam1.jpg

மன்னன் பத்ரகிரி வெவ்வேறு காரணங்களுக்காக பல பெண்களை மணந்துகொள்ள நேர்ந்தது. இருப்பினும் தன் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி குழந்தைகள் பிறக்காமல் பார்த்துக்கொண்டான். ஒரு நாள் பத்ரகிரியின் அரண்மனைக்கு தவயோகி ஒருவர் வந்திருந்தார். அவர் தேவலோகம் சென்றிருந்தபோது தனக்குக் கிடைத்த அபூர்வமான கொம்மட்டி மாதுளங்கனியை மன்னனுக்குப் பரிசாகக் கொடுத்து, அதன் மகிமைகளையும் கூறிவிட்டுச் சென்றார்.அந்த மாதுளங்கனியை தன் முதல் மனைவி மோகனாங்கியிடம் கொடுத்த பத்ரகிரி, பிறிதொரு நேரம் அதை உண்ணலாம் என்றும் அதைப் பத்திரமாக வைக்கும்படியும் கூறினான். பதிவிரதா தன்மையற்ற மோகனாங்கி, அக் கனியை தான் நேசிக்கும் குதிரைக்காரனிடம் கொடுத்தாள். குதிரைக்காரன் அக்கனியை தனக்கு நெருக்கமான வேலைக்காரப் பெண் ஒருத்திக்குக் கொடுத்துவிட்டான்.அன்று மாலை மன்னன் பத்ரகிரி அரண்மனை மேல்மாடத்தில் ஓய்வாக நின்று ராஜவீதியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது தெருவில் சென்றுகொண்டிருந்த வேலைக்காரப் பெண் ஒருத்தி வைத்திருந்த கூடையில், தான் மனைவியிடம் கொடுத்திருந்த மாதுளங்கனி இருப்பதைக் கண்டு அவன் திடுக்கிட்டான். உடனே அவளை அழைத்துவரச் செய்து பழம் கிடைத்த விவரத்தைக் கேட்டான். அவள் சொன்ன பதிலிலிருந்து அரண்மனையில் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்து விட்டான் மன்னன். மனம் வெறுத்த பத்ரகிரி, அரண்மனையைவிட்டு வெளியேறி காட்டிற்குச் சென்று தவவாழ்க்கை மேற்கொண்டான்.அடுத்த மன்னனாக, சித்ரரேகையின் மகன் விக்கிரமாதித்தன் முடிசூட்டப்பட்டான். கோமள வல்லியின் மகன் பட்டி பிரதான மந்திரியாக இருந்து ஆலோசனைகள் கூறி ஆட்சியில் உறு துணையாய் இருந்துவந்தான்.விக்கிரமாதித்தன் தன் வலிமைக்கும் தகுதிக்கும் ஏற்றாற்போல் நாடுகள் பலவற்றை வென்று தன்னுடைய ஆட்சியை நிறுவவேண்டுமென விருப்பம் கொண்டிருந்தான். ஒருநாள் விக்கிரமாதித்தன் பட்டியை அழைத்து, தங்கள் பெருமைக்குகந்த நகரம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும் என்றும், அதற்கேற்றபடி வளமான இடம் ஒன்றைத் தேர்வுசெய்து வரும்படியும் கூறினான்.அதன்படி நீண்ட பயணம் மேற்கொண்ட பட்டி, ஒருநாள் பசுமையான இடம் ஒன்றைக் கண்டான். விக்கிரமாதித்தனின் விருப்பப்படி நகரம் அமைக்கத் தகுதியான இடம் இதுதான் என முடிவு செய்தான்.வனசகிரி என்ற மலையும், அதனருகே சிலுசிலுவென ஓடிக்கொண்டிருந்த குணவதி ஆறும் அந்த இடத்தை அழகு செய்தன. ஆற்றங்கரையில் இருந்த அழகிய சிற்றூரில் பெரிய ஆலமரம் ஒன்றிருந்தது. அதனருகே கலையம்சத்துடன் கூடிய பத்ரகாளி ஆலயமொன் றும் இருந்தது. கோவிலுக்கருகே சென்ற பட்டி, அருகிலிருந்த குத்துக்கல்லில் சில குறிப்புகள் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தான்.“எவனொருவன் கோவில் திருக்குளத்தில்  குளித்துவிட்டு கோவிலை மூன்று முறை வலம் வந்து காளியை வணங்கி, பிறகு ஆலமரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஏழு உறிகளையும்- அந்த உறிகளில் ஏறிநின்று அவற்றை ஒரே வெட்டில் அறுபடச் செய்து, அங்கிருந்தபடியே திருக்குளத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள வேலின் முனையில் தலைகீழாகப் பாய்கிறானோ- அவனுக்கு அம்மன் காட்சி தந்து வேண்டும் வரங்களை அளிப்பாள்’ என்ற வாசகங்கள் அக் கல்லில் காணப்பட்டன.உடனே நாடு திரும்பிய பட்டி, விக்கிரமாதித்த னிடம்  விவரங்களைக் கூறினான். அந்த இடத்தைக் காண ஆவல்கொண்ட விக்கிரமாதித்தன் பட்டியை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.அந்த இடத்தை அடைந்ததும் முதலில் காளியை வழிபட்டனர். விக்கிரமாதித்தனின் பணிவு, பக்தி, பொலிவு ஆகியவற்றைக் கண்ட அம்மன், அவனுடைய அனைத்து செயல்களிலும் உறுதுணையாய் இருக்கத் திருவுளம் கொண்டாள். தான் விரும்பியபடி நகரம் அமைக்க குணவதி ஆற்றங்கரை ஏற்ற இடமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தான் விக்கிரமாதித்தன். தன் எண்ணம் குறைவின்றி நிறைவேற காளியின் அருளைப்பெற தீர்மானித்து, கல்வெட்டில் கூறியிருந்தபடி ஆலமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஏழு உறிகளையும் ஒரே வெட்டில் வீழ்த்தினான். பின்னர் பொய்கை நடுவிலிருந்த வேல் முனையில் தலைகீழாகப் பாய்ந்தான். விக்கிரமாதித்தன் தலை வேலில் படுவதற்கு முன்பே அவனை கையில் ஏந்திக்கொண்ட காளிதேவி, கோவிலுக்குள் தூக்கிச் சென்றாள். மயக்கமடைந்திருந்த விக்கிரமாதித்தனை மூர்ச்சை தெளிவித்தாள். மூர்ச்சை தெளிந்து எழுந்த விக்கிரமாதித்தன் தன் எதிரே காளிதேவி இருப்பதைக் கண்டு பரவசமடைந்து, தேவியின் பாதங்களில் விழுந்து வணங்கித் தன் விருப்பங்களைக் கூறினான்.

விக்கிரமாதித்தனின் வேண்டுதலை ஏற்ற காளிதேவி, புதிய நகரம் அமைப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகக் கூறி, அவனிடம் பொக்கிஷங்கள் அடங்கிய பேழை ஒன்றையும் கொடுத்தாள். தேவியின் அருளாலும் ஆசியாலும் புதிய நகரத்தை நிர்மாணித்த விக்கிரமாதித்தனும் பட்டியும் அந்நகரத்திற்கு உஜ்ஜயினி மாகாளிப் பட்டினம் என்று பெயரிட்டனர். அத்துடன் தங்கள் இஷ்டதெய்வமான காளிதேவிக்கு அற்புதமான கோவில் ஒன்றையும் கட்டினர்.

ஒரு நல்ல நாளில், விக்கிரமாதித்தன் தன் நாட்டு மக்களுடன் புதிய நகரில் குடியேறினான். அங்கிருந்தபடி மாபெரும் சக்ரவர்த்தியாக ஆட்சி செய்துவந்தான்.

ஒருநாள் தேவலோகத்தில் அரம்பை, ஊர்வசி இருவருக்குமிடையே நடனப் போட்டி நடைபெற்றது. இருவருமே சிறப்பாக ஆடியதால் தேவேந்திரனும் சபையோரும் அவர்களில் யார் வெற்றி பெற்றவர் என்று தீர்மானிக்க முடியாமல் திகைத்தனர். மதிநுட்பம் கொண்ட விக்கிரமாதித்தனே அவர்களின் வெற்றி- தோல்வியை சரியாகத் தீர்மானிக்கக்கூடியவன் என முடிவு செய்து, விக்கிரமாதித்தனை தேவலோகத்திற்கு அழைத்து வரச் செய்தான் தேவேந்திரன்.

தேவேந்திரனின் வேண்டுகோளை ஏற்ற விக்கிரமாதித்தன், அரம்பை, ஊர்வசி இருவர் கையிலும் பூச்செண்டுகளைக் கொடுத்து நடனமாடச் செய்தான். போட்டி முடிவில், கையிலிருந்த மலர் கசங்காத வண்ணம் நடனமாடிய ஊர்வசியே சிறந்த நடனமாது எனத் தீர்ப்பளித்தான். விக்கிரமாதித்தனின் புத்திக்கூர்மையைப் பாராட்டிய தேவேந்திரன் அவனுக்கு அழகிய சிம்மாசனம் ஒன்றைப் பரிசாக அளித்தான். 32 படிகளும், 32 பதுமைகளும் கொண்ட நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட அந்த அற்புதமான சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குக் கொடுத்து, “”இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து 1,000 ஆண்டுகள் எந்தக் குறையுமின்றி நாட்டை ஆட்சி செய்வாய்” என வாழ்த்தி தேவேந்திரன் தனது தேரிலேயே அவனைவ பூலோகம் அனுப்பி வைத்தான்.

மிகச் சிறந்த பரிசுடன் திரும்பிவந்த விக்கிர மாதித்தனைக் கண்டு மனம் மகிழ்ந்த பட்டி, “”தேவேந்திரனிடம்  எனக்காக ஏதேனும் வரம் வாங்கி வந்தீர்களா?” என்று கேட்டான்.

“”உனக்காக நான் எந்த வரமும் பெற்று வரவில்லையே” என்றான் விக்கிரமாதித்தன்.

அதைக்கேட்டு மிகவும் மனம் வருந்திய பட்டி, உஜ்ஜயினி மாகாளியிடமிருந்து தான் சிறப்பான வரம் பெறவேண்டும் என்று உறுதி கொண்டான்.

அதன்படி ஒருநாள் நள்ளிரவில் பட்டி காளிகோவிலுக்குச் சென்றான். நகர்வலம் சென்று திரும்பிய காளி அர்த்த ராத்திரியில் பட்டி கோவில்முன் நிற்பதைப் பார்த்து, “”நடுநிசியில் என்ன காரணத்திற்காக இங்கு வந்திருக்கிறாய்?” என்று கேட்டாள்.

பட்டி காளியை வணங்கி, “”தேவி, என் தமையனும் மன்னனுமான விக்கிரமாதித்தன் தேவலோகம் சென்று தேவேந்திரனிடமிருந்து அற்புதமான சிம்மாசனம் ஒன்றைப் பெற்று வந்துள்ளான். மேலும் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து ஆயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்யவும் தேவேந்திரனிடமிருந்து வரம் பெற்றுள்ளான். எனக்கென அவன் எந்த வரமும் பெற்று வரவில்லை. நான் இப்போது இருப்பதைப்போலவே அவனுடன் ஆட்சியில் பங்கு கொண்டு அவனுக்குப் பேருதவியாய் இருப்பதற்கும், நான் அவனைவிட 1,000 ஆண்டுகள் அதிகமாக உயிர் வாழவும் வரமருள வேண்டும்” என வேண்டினான். அதற்கு காளி தேவி, “”அனைத்து லட்சணங்களும் பொருந்திய சக்ரவர்த்தி ஒருவனின் தலையை எனக்கு காணிக்கையாகக் கொடுத்தால் உன் விருப்பப்படி நான் வரமளிக்கிறேன்” என்று கூறி மறைந்தாள்.

காளிதேவியின் நிபந்தனையைக் கேட்டு பட்டி சற்றே திடுக்கிட்டாலும், அதனை நிறைவேற்றிவிடும் உறுதியுடன் யாருடைய தலையைக் காணிக்கையாக்குவது என்று சிந்தித்தபடியே நடந்தான்.

 

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2013/august/devangu-puranam.jpg

            சிவபெருமானிடம் வரம்பெற்று அரண்மனை திரும்பிய புட்பதத்தன் தன் மனைவியிடம் அதைக் கூறி மகிழ்ந்தான். தான் பெற்ற வரத்தின்படி தன் மனைவி தேவதத்தையுடன் நாள்தோறும் பொழுது புலர்வதற்குமுன் கயிலைக்குச் சென்று, அம்மையையும் அப்பனையும் மலர் தூவி வழிபட்டு வந்தான்.

ஒருநாள் மாலை நந்தவனத்திற்கு அருகில் சென்றுகொண்டிருந்த புட்பதத்தன், அங்கு நறுமணம்மிக்க வண்ண மலர்கள் மலர்ந்திருப்பதைக் கண்டான். அவை வாடுவதற்குமுன் இறைவனின் திருவடிகளில் சேர்த்துவிட வேண்டும் என்னும் ஆவல் ஏற்பட, தன் மனைவியைக்கூட அழைக்காமல் தான்மட்டும் திருக் கயிலை சென்றடைந்தான்.

சிவபெருமான் வழக்கமாக பக்தர் களுக்குக் காட்சிதரும் இடத்தில் காணப்படவில்லை. அம்மையும் அப்பனும் ஓரிடத்தில் தனித்து உரையாடிக்கொண்டிருந்தனர். தேவி இறைவனிடம், “”பெருமானே, இதுவரை எவரும் கேட்டிராத கதை ஒன்றைக் கூறி அருளுங்கள்” 

என  வேண்டினாள். இறைவனும் தேவி கேட்டவாறே யாரும் கேட்டிராத புதிய கதை ஒன்றைக் கூறிக்கொண்டிருந்தார். இறைவனின் வருகைக்காக மலர்களுடன் காத்திருந்த புட்பதத்தன் அக்கதையைக் கேட்க நேர்ந்தது.

அம்மையப்பனுக்காக நெடுநேரம் காத்திருந்த புட்பதத்தன் தான் கொய்து வந்திருந்த புது மலர்கள் வாடுவதைக் கண்டு மனம்வருந்தி சிவபெருமானை தரிசிக்க முடியாமல் அரண்மனைக்குத் திரும்பினான். வெளியே சென்றிருந்த தன் கணவன் வெகுநேரமாகியும் அரண்மனைக்குத் திரும்பாததால் கலக்கமடைந்திருந்த தேவதத்தை அவன்மீது மிகுந்த கோபம் கொண்டிருந்தாள். அவளைச் சமாதானம் செய்வதற்காகப் பல வழிகளிலும் முயற்சித்து தோல்வியுற்ற புட்பதத்தன், தான் கயிலை சென்றிருந்ததையும், அங்கு இறைவனைக் காண காத்திருந்தபோது இறைவன் இதுவரை உலகம் அறிந்திராத புதுக்கதை ஒன்றை இறைவிக்குச் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்ததையும் தேவ தத்தையிடம் கூறினான்.

உடனே அவளது கோபம் தணிந்தது. உலகமே அறிந்திராத அந்தக் கதையைக் கேட்க ஆவல் கொண்டு, “”அதை எனக்குச் சொல்லவேண்டும்” என்று கேட்டாள்.

தன் மனைவியை சமாதானப்படுத்த எண்ணிய புட்பதத்தன், தேவரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது என்று தெரிந்திருந்தும் பின்னால் ஏற்படப் போகும் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அவளிடம் சொன்னான். முதலில் மானிடன் ஒருவனுக்கு மட்டுமே தெரிந்திருந்த தேவ ரகசியம் தற்போது மானிடர் இருவருக்குத் தெரிந்த விஷய மாயிற்று.

மறுநாள் வழக்கம்போல் இருவரும் பூஜைப் பொருட்களுடன் கயிலை சென்றனர். புட்பதத்தனும் தேவதத்தையும் தனித்தனியே சிவன்- பார்வதி சந்நிதிகளுக்குச் சென்றனர். 

தேவியை வணங்கிய தேவதத்தை, எவரும் அறிந்திராத புதிய கதை ஒன்றைச் சொல்லப் போவதாகக் கூறி, முதல் நாள் தன் கணவன் கூறிய கதையை தேவியிடம் சொன்னாள். 

தேவதத்தை கூறிய கதையைக் கேட்ட தேவி திடுக்கிட்டாள்.
 

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2013/august/devangu-puranam1.jpg

யாருமறியாத கதை என்று ஈசன் தன்னிடம் கூறிய அதே கதையை தேவதத்தையும் கூறியதால் மிகுந்த கோபம்கொண்ட தேவி சிவபெருமானிடம் சென்று, “”மானிடருக்கும் தெரிந்த ஒரு கதையை எவருமே அறிந்திராத புதுக்கதை என்று சொல்லி என்னை ஏமாற்றிவிட்டீர்களே?” என்று கோபித்துக் கொண்டாள். நடந்ததை அறிந்த சிவபெருமான் புட்பதத்தன் மீது கடுங்கோபம் கொண்டார். தன் தவறை உணர்ந்த புட்பதத்தன், “”பெருமானே, அடியேன் தங்களை வழிபட நேற்று மாலை வந்திருந்தேன். அப்போது தாங்கள் தேவிக்குக் கூறிக்கொண்டிருந்த கதையை வெளியில் காத்து நின்ற நான் தற்செயலாகக் கேட்க நேர்ந்தது. அக்கதையை தேவதத்தைக்கு நான் கூறும்படி நேர்ந்துவிட்டது. அறியாமல் செய்துவிட்ட இந்தத் தவறை மன்னித்து அருளுங்கள்” என்று பணிந்து வேண்டினான்.

புட்பதத்தன்மீது கொண்டிருந்த கோபம் தணியாத சிவபெருமான், “”யாரும் அறியாது பிராட்டிக்கு யாம் சொன்ன மறைபொருளை மறைந்திருந்து கேட்டு பிறர் அறியும்படி கூறிய நீ வேதாளமாக மாறுவாய். தான் கேட்டதை மனஅடக்கமின்றி வெளிப்படுத்திய உன் மனைவி மானாகப் பிறக்கக்கடவது” எனச் சாபமிட்டார்.

ஈசன் தனக்கிட்ட சாபத்தால் பூவுலகிற்கு சில நன்மைகளும் கிட்டுமென்பதை உணர்ந்திருந்த புட்பதத்தன், தங்கள் இருவரையும் மன்னித்து சாப விமோசனம் அருளும்படி ஈசனை வேண்டினான். 

மனமிரங்கிய சிவபெருமான், “”அன்பனே, நீ பாடலிபுத்திரத்திற்கு அருகிலுள்ள காட்டில், ஒரு பெரிய முருங்கை மரத்தில் வேதாளமாக இருப்பாய். உன் மனைவி அதனருகில் இருக்கும்மற்றொரு காட்டில் பகலில் சுற்றித் திரியும் மானாகவும், இரவில் அழகான பெண்ணாகவும் மாறி யாழிசைத்து என்னைத் துதித்துக் கொண்டிருப்பாள். விக்கிரமாதித்த மன்னன் உங்கள் இருவரையும் சந்திக்கும்படிச்செய்யும் நாளில், நீங்கள் இருவரும் சாபம் நீங்கி உங்கள் சுய உருவம் பெற்று என்னை வந்தடைவீர்கள்” என சாபவிமோசனம் அருளினார்.

இறைவனிட்ட சாபத்தின்படி புட்பதத்தன் வேதாளமாக மாறி, பாடலிபுத்திரத்துப் பெருங்காட்டில் பேய்களுக்குத் தலைவனாய் முருங்கை மரத்தில் வசித்து வந்தான். தேவதத்தை மற்றொருகாட்டில் பகலில் மானாகவும், இரவில் பெண்ணாக மாறி யாழ் வாசித்துக்கொண்டும் இருந்தாள்.

கலியுக சகாப்தம் ஆரம்பமாகி சில ஆண்டுகள் கழிந்திருந்தன. வேதநாராயணபுரம் என்ற ஊரில் வாழ்ந்து வந்த விஷ்ணுசர்மன் என்ற அந்தணனுக்கு யக்ஞ நாராயணன், வேத நாராயணன், வீர நாராயணன், சந்திர சர்மன் என்ற நான்கு மகன்கள் இருந்தனர்.

நால்வரில் சந்திரசர்மனைத் தவிர மற்ற மூவரும் அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாய் பேரும் புகழும் செல்வமும் பெற்று சுகமாக வாழ்ந்து வந்தனர். அதிகம்  படிக்காத சந்திரசர்மன் தன் சகோதரர்களால் அடிமையைப்போல் நடத்தப்பட்டான். தன்னுடைய கல்வி அறிவின்மையையும் இயலாமையையும் குறித்து மிகவும் மனவருத்தமடைந்த சந்திரசர்மன், ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினான்.

நெடுந்தூரம் நடந்து சென்றவன் சூரிய அஸ்தமன நேரத்தில் ஒரு நதிக்கரையை அடைந்தான். அங்கு கை, கால்களைக் கழுவிக் கொண்டு அருகிலிருந்த  அரச மரத்தின் கீழே அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டான்.

வெகுகாலமாக அந்த அரச மரத்தில் ஒரு அரக்கரிஷி வாழ்ந்து வந்தார். மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்த சந்திரசர்மனைக் கண்டு கீழிறங்கி வந்த அரக்கரிஷி அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்க, சந்திரசர்மனும் நடந்தவற்றைக் கூறினான். 

சந்திரசர்மனின் கல்வி கற்கும் ஆர்வத்தை அறிந்துகொண்ட அரக்கரிஷி, அவனுக்குக் கல்வி கற்றுத் தர எண்ணம் கொண்டார்.

“”சந்திரசர்மா, ஆறு மாதகாலம் நீரும் உணவுமின்றி இந்த மரத்தடியில் நீ தவம் மேற்கொள்ள வேண்டும். அதை வெற்றிகரமாய் முடித்துவிட்டால் அதன் பின் உனக்கு யானறிந்த கல்வியைக் கற்பிப்பேன்” என்று கூறி, தவமியற்றும் போது ஜெபிக்க வேண்டிய மந்திரத்தையும் அவனுக்கு கற்றுக்கொடுத்தார்.

அதன்படியே சந்திரசர்மன் நீரும் உணவு மின்றி தவத்தில் ஆழ்ந்தான். ஆறு மாதங்கள் கடந்தன. அவன் கல்வி கற்பதற்குரிய தகுதியைப் பெற்றுவிட்டான் என்பதை உணர்ந்த அரக்கரிஷி,அரசமரத்தின் மேலிருந்து தான் கற்றவற்றை இலைகளில் எழுதிப்போட ஆரம்பித்தார். 

அவற்றை எடுத்துப் படித்துவந்த சந்திரசர்மன் கல்வியறிவு பெற்றவன் ஆனான்.

தனக்கு அறிவு புகட்டிய அரக்கரிஷிமீது சந்திரசர்மனுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. அவருக்கு நன்றி தெரிவித்த சந்திர சர்மன், “”குருவே, அற்புதமாய் கலைகள், சாஸ்திரங்
கள் ஆகியவற்றைக் கற்பிக்கும் தாங்கள் அரக்க ரிஷியாய் இருப்பதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டான்.

“”சந்திரசர்மா, கிருஷ்ணா நதிக்கரையில் சரஸ்வதிபுரம் என்ற ஊரில் அந்தணர் குலத்தில் பிறந்தநான் அனைத்துக் கலைகளையும் கற்றுச் சிறந்த மேதையாகத் திகழ்ந்தேன். ஒருநாள் எனக்கு அறிமுகமில்லாத அந்தணன் ஒருவன் என்னிடம் வந்து தனக்கு வேத சாஸ்திரங்களைக் கற்பிக்கும்படி கேட்டான். எனக்கிருந்த கல்விச் செருக்கால் அவனது வேண்டுகோளை நிராகரித்து விட்டேன். ஆனால் வந்தவர் யார் தெரியுமா? சாட்சாத் சிவ பெருமானேதான். தான் கற்ற கல்வியைப் பிறருக்குக் கற்றுத்தர மறுப்பது அந்தண குலத்துக்கே அவமானம் என்று உணர்த்திய சிவபெருமான், என்னை அரக்கனாகும்படி சபித்துவிட்டார். நான் இறைவனிடம் சாபவிமோசனம் வேண்டி நின்றபோது, கல்வி கற்க விரும்பும் அந்தணன் ஒருவனுக்கு குறைவறக் கல்வி கற்பித்து அவனது  கல்வி முழுமை அடையும் நாளில் என் சாபம் நீங்கும் என்றும்; அப்போது விண்ணுலகம் செல்ல விமானம் வரும் என்றும் இறைவன் கூறியருளினார். அந்த நாள் உன் கல்வி அறிவு முழுமை பெற்ற இந்த நாள்தான்” என்று அரக்கரிஷி கூறிக் கொண்டிருக்கும்போதே விண்ணுலகிலிருந்து விமானம் இறங்கிவர, சாபம் நீங்கிய அரக்கரிஷி அதில்  ஏறி விண்ணுலகம் சென்றார்.

கல்வியறிவு நிரம்பப் பெற்ற ஒருவன் தான் பெற்ற கல்வியைப் பிறருக்கு அளிக்கமறுப்பதுஅரக்கத்  தன்மைக்கு ஒப்பானது எனும் கருத்தையே இதன்மூலம் இறைவன் உலகுக்கு உணர்த்தியுள்ளார் என்று எண்ணியபடியே சந்திரசர்மன் தன் சொந்த ஊர் நோக்கிப் புறப்பட்டான். சில காத தூரம் நடந்து சென்ற சந்திரசர்மன் மிகவும் களைப்பாக இருப்பதை உணர்ந்தான். ஆறு மாதகாலம் ஊண், உறக்கமின்றி இருந்த சந்திரசர்மன் எங்காவது ஓரிடத்தில் தங்கி, உண்டு உறங்கிச் செல்லலாம்  என எண்ணினான். கன்னியாபுரம் என்ற நகரில் சென்றுகொண்டிருந்தவன் களைப்பு மிகுதியால்  சாலையோரத்திலிருந்த ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்துறங்கினான்.

அந்த வீடு சௌந்தரவல்லி என்ற தேவதாசிக்குச் சொந்தமானது. தன் வீட்டுத் திண்ணையில் இளைஞன் ஒருவன் படுத்துறங்குவதைக் கண்ட சௌந்தரவல்லி, அவனது அழகில் மயங்கி அவனையே திருமணம் செய்துகொள்ள  வேண்டுமென விரும்பினாள். நீண்ட நேரம் கண் விழிக்காமல் படுத்திருந்த சந்திரசர்மன் அருகில் சென்று பார்த்த சௌந்தர வல்லி, அவன் மயங்கிய நிலையில் உணர்வின்றி இருப்பதைக் கண்டாள்.

உடனே தன் தாயை அழைத்த சௌந்தரவல்லி விஷயத்தைக் கூறினாள். பார்த்த சௌந்தரவல்லியின் தாய் சந்திரசர்மனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதைக் கண்டு, உடனே அவனுக்கு சிகிச்சை செய்யாவிட்டால் அவன் உயிர் பிழைப்பது கடினம் என்பதையும் உணர்ந்துகொண்டாள். அந்நகரத்து மன்னன் சுருதகீர்த்தியிடம் விரைந்து சென்று விவரத்தைக் கூறினாள். அவள் கூறியதைக் கேட்ட மன்னன் உடனே அரண்மனை வைத்தியர்களை அவளுடன் அனுப்பி வைத்தான்.

சௌந்தரவல்லியின் வீட்டுக்கு வந்த வைத்தியர்கள் அவன் உடலைப் பரிசோதித்தபோது அவனுடைய அனைத்து உறுப்புகளும் செயலிழந்துவிட்டதையும், மூச்சு மட்டும் இருப்பதையும் கண்டனர். “ஒரு படி அரிசி சாதத்தையும், ஒரு படி நெய்யையும் ஒன்றாகக் கலந்து, மூன்று வேளையும் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஒத்தடம் கொடுத்தால் மயிர்க்கால்கள் வழியாக ஆகாரம் உட்சென்று உணர்வைக் கொடுக்கும்; அவன் உயிர்பிழைப்பான்’ என்று வைத்தியர்கள் கூறினர். அதன்படி சௌந்தரவல்லி சந்திரசர்மன் அருகிலேயே இருந்து வைத்தியர் கூறியபடி அன்னமும் நெய்யும் கலந்து ஒத்தடம் கொடுத்துவந்தாள்.

ஏற்கெனவே சந்திரசர்மனின் அழகில் மயங்கி அவனைத் திருமணம் செய்துகொள்ள ஆவல்கொண்டிருந்த சௌந்தரவல்லிக்கு, சில நாட்களாக அவனருகில் இருந்து சிகிச்சை செய்துவந்ததால் அவனிடம் மிகுந்த பற்றுதல் உண்டாயிற்று. தனக்குத் திருமணமென்று நடந்தால் அது இவனோடு மட்டும்தான் என்று உறுதிகொண்ட அவள் தன் எண்ணத்தை தாயிடம் தெரிவித்தாள்.

தேவதாசி குலத்தைச் சேர்ந்த பேரழகியான தன் மகளுக்கு செழிப்பான வாழ்க்கையைஅமைத்துத் தர எண்ணியிருந்த சௌந்தரவல்லியின் தாய், தன் மகள் யாரோ ஒரு வழிப்போக்கனை விரும்புவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதற்கு உடன்பட மறுத்தாள். ஆனால் சௌந்தரவல் லியோ, “”நீங்கள் சம்மதிக்கவில்லை என்றால் நான் மரணமடைவதைத் தவிர வேறு வழி யில்லை” என்றாள். மகளின் விபரீத முடிவைக் கேட்டு அதிர்ந்த அவளது தாய் திருமணத்திற்கு சம்மதித் தாள்.

சௌந்தரவல்லி அளித்துவந்த இடைவிடாத சிகிச்சையால் சந்திரசர்மன் விரைவில் குண மடைந்து கண்விழித்தான். அதுவரை நடந்தது எதுவுமே அறியாதவனாய் தூக்கத்திலிருந்து விழித்தவனைப்போல் எழுந்து எவரிடமும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டான்.

சந்திரசர்மனைத் தடுத்து நிறுத்திய சௌந்தர வல்லி அவன் மயங்கிய நிலையில் தன் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்ததையும், அரண்மனை வைத்தியரை அழைத்துவந்து காட்டி அவர் கூறியபடி சிகிச்சை அளித்து அவனைக் காப்பாற்றியதையும் அவனிடம் கூறினாள். தன் உயிரைக் காப்பாற்றிய சௌந்தரவல்லிக்கு  நன்றி கூறிய சந்திரசர்மன் மீண்டும் அங்கிருந்து புறப் படத் தயாரானான்.

சந்திரசர்மன்மீது விருப்பம் கொண்டிருந்த சௌந்தரவல்லி அவனிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வேண்டினாள். தேவதாசி குலத்தைச் சேர்ந்த சௌந்தரவல்லியை அவன் திருமணம் செய்துகொள்ள சாஸ்திரங்கள் அனுமதிக்காது என்று கூறி, சந்திரசர்மன் மறுத்துவிட்டான்.

அதைக்கேட்டு மிகுந்த கோபமடைந்த சௌந்தரவல்லி, “”உங்களை என் கணவனாக எப்போதோ தீர்மானித்துவிட்டேன். நீங்கள் என்னைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் நான் உயிருடன் இருக்கப்போவதில்லை. இந்தப் பிரச்சினைக்கு என்னுடைய மரணம்தான் தீர்வாக இருக்கும் என்றால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்றாள்.

இந்த ஒருதலைக்காதல் வெற்றியடைந்ததா? இதற்குத் தடையாக இருந்த சாஸ்திர சம்பிரதாயங்களுக்குப் பரிகாரம்தான் என்ன?

 

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2013/july/thevankupurnam.jpg

 

           வஞ்சகனான வித்தையுத்சேனன் தன் மந்திர சக்தியால் தேவேந்திரனின் தூதுவனைப்போல் உருமாறி ஆமோத நகர் சென்றான். தேவாங்க மன்னனின் திருமுன் நின்று அவரைப் பணிந்து வணங்கி, “”பேரரசே, தங்களிடம் தோற்றோடிய வச்சிரதந்தன் மீண்டும் பெரும்படையுடன் வந்து அமராவதி நகரை முற்றுகையிட்டுப் போர் புரிகிறான். தேவர்கள் அவனை எதிர்த்து நிற்கமுடியாமல் தோல்வியுற்று ஓடி ஒளிகிறார்கள். விடைக் கொடியினாலன்றி வேறு எதனாலும் அரக்கர்களை வெல்லமுடியாது என்பதால், தங்களி டமிருந்து விடைக்கொடியைப் பெற்றுவர தேவேந்திரன் என்னை அனுப்பியுள்ளார். தாங்கள் அருள்கூர்ந்து அக்கொடியைக் கொடுத்து உதவுங்கள்” என வேண்டினான்.

அவன் கூறியதை உண்மையென்று நம்பிய தேவாங்கர் விடைக்கொடியை அவனிடம்கொடுத்து, அதைப் பயன்படுத்தும் முறையையும் கூறி அனுப்பி வைத்தார். தேவாங்கரிடமிருந்து கொடியைப் பெற்றுக் கொண்ட வித்தையுத்சேனன் அதை வச்சிர தந்தனிடம் சேர்ப்பித்தான். அரக்கமன்னன் வச்சிரதந்தன் அக்கொடியுடன், தன் படைகளைத் திரட்டிக்கொண்டு அமராவதி நகர் சென்று தேவர்களுடன் போரிட்டான். அரக்கர்களுடைய படை பலத்தையும், அவர்கள் ஆவேசத்துடன் போர்புரிவதையும் கண்ட தேவேந்திரன், 

அவர்களை வெல்ல வேண்டுமானால் அது தேவாங்க மன்னனிடம் இருக்கும் விடைக்கொடியினால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து, தனக்கு உதவி செய்ய வருமாறு தேவாங்க மன்னனுக்கு தூதனுப்பினான்.

தூதுவர் மூலம் செய்தியறிந்த தேவாங்கர், நேற்று நாம் அனுப்பிய விடைக்கொடியிருக்க இன்று நம்மை ஏன் உதவிக்கு அழைக்கிறான் என்று ஐயுற்று, ஏதோ சூது நடந்திருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டார். எந்தவித ஏற்பாடுமின்றி அமராவதி நகர் சென்ற தேவாங்கருக்கு அரக்கர்களின் கபட நாடகம் தெரியவந்தது. தான் அரக்கர்களால் ஏமாற்றப் பட்டதை அறிந்து வருந்தினார். கொடியைப் பயன்படுத்தி வச்சிரதந்தன் தேவர்களை வீழ்த்தினான். தேவாங்கரை சிறைப்பிடித்து மிகவும் துன்புறுத்தி வீரமகேந்திரபுரிக்கு அழைத்துச் சென்றான்.

இதுவரை போர்களில் வீழ்ச்சியே கண்டிராத தேவாங்கர் அரக்கர்களின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டதை எண்ணி வருந்தினாலும், “நீ ஒருநாள் பகைவரிடம் தோல்வியுற்றுக் கட்டுண்டு துன்புறுவாய்’ என்று முன்னொரு நாள் அரம்பை தனக்கிட்ட சாபம் தற்பொழுது நிறைவேறிவிட்டதை உணர்ந்து அமைதி கொண்டார்.

தேவாங்கரை கைதியாக அழைத்துவந்த வச்சிரதந்தன் அவரது தெய்வீக தோற்றத்தைக் கண்டு மெல்ல மெல்ல மனம் மாறினான். அவர்மீது மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. தேவாங்கரை சிறைப்பிடித்து அழைத்து வந்தது தவறென்பதை உணர்ந்துகொண்ட வச்சிரதந்தன் அவரை விடுவித்து, தான் அவருக்கிழைத்த துன்பங்களுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டான். தன் தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக தன் மணிமகுடத்தையே அவருக்குச் சூட்டி, அவரை வீரமகேந்திரபுரி மன்னனாக்கினான். நடப்பவை அனைத்தும் ஈசன் செயலன்றி வேறெதுவுமில்லை என்றெண்ணிய தேவாங்கர், வச்சிரதந்தனுடைய நட்பை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2013/july/thevankupurnam1.jpg

வீரமகேந்திரபுரியில் நல்லாட்சி செய்து கொண்டிருந்த தேவாங்கருக்கு தன் மகள் பத்மினியைத் திருமணம் செய்துகொடுக்க விரும்பிய வச்சிரதந்தன், தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தான். அரக்கர் தலைவரின் அன்பான வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதே ஒரு மன்னனின் கடமை என்பதை தேவாங்கர் அறிந்திருந்தாலும், அரக்கர்குலப் பெண்ணைத் தான் மணப்பதை உலகம் ஏற்றுக்கொள்ளுமா எனத் தயங்கினார். தேவாங்கரது தயக்கத்தை உணர்ந்ததுபோல அக்னி தேவன் அவர்முன் தோன்றி, “”மன்னனே, பத்மினி என் மகள். அக்னிதத்தை என்பது அவள் பெயர். என்னுடைய நண்பனான வச்சிரதந்தனுக்குப் பெண் குழந்தை இல்லாததால், அவனுக்கு அக்னி தத்தையை வளர்ப்பு மகளாகக் கொடுத்தேன்.  அவன் அவளுக்கு பத்மினி என்று பெயரிட்டுத் தன் மகளாக வளர்த்து வருகிறான். தாங்கள் தயக்கமின்றி அவளை மணந்துகொள்ளலாம்” என்று கூறினான்.  பிறகென்ன? தேவர்கள் வாழ்த்த தேவாங்கர்- அக்னிதத்தை திருமணம் சிறப்பாக நடந்தேறியது. அவர்கள் இல்லறத்தின் பயனாக அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தை கள் பிறந்தன.

தன் புதல்வர்களான சாலன், அலன், பெலன் ஆகிய மூவருக்கும் தேவாங்கர் தனதுகுலத்தொழிலான நெசவுக்கலையைக் கற்றுக் கொடுத்தார். அவர்கள் மூவரும் அழகிய ஆடைகள் செய்து அரக்கர் குல மக்கள் அனைவருக்கும் வழங்கினர். அரக்கர்கள் தேவாங்கரையும், அவரது புதல்வர்களையும் பாராட்டி மகிழ்ந்தனர்.

வீர மகேந்திரபுரியை விட்டு ஆமோத நகர் செல்ல விரும்பிய தேவாங்கர் தன் விருப்பத்தை வச்சிரதந்தனிடம் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட வச்சிரதந்தன், அவரிடமிருந்து தான் வஞ்சகமாக அபகரித்து வந்த விடைக்கொடியுடன் பரிசுப் பொருட்கள் பலவற்றையும் அளித்து விடை கொடுத்தனுப்பினான். தனக்கும் அரக்கர் குல மன்னனின் வளர்ப்பு மகள் பத்மினிக்கும் திருமணம் நடப்பதன் மூலம், அரக்கர்களுக்கும் தேவர்களுக்கும் இருந்துவந்த பகைமை மறைந்து, அவர்களுக்குள் நல்லுறவு ஏற்படுத்த தன்னைக் கருவியாக்கிக் கொண்ட இறைவனை வணங்கிய தேவாங்கர், இறைவனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்தப் பிறவியில் தன் கடமைகளை நிறைவாகச் செய்து முடித்த மகிழ்ச்சியிலிருந்த தேவாங்கருக்கு அடுத்த பிறவி காத்திருந்தது.

வித்யாதர உலகில் வாழும் விஞ்சையர்கள் அனைவரும் அறுபத்து நான்கு கலைகளையும் எந்தக் குறையுமின்றி கற்றுக்கொள்ள விருப்பம் கொண்டனர். அதற்காக திருக்கயிலை சென்று சிவபெருமான் திருமுன் நின்று வணங்கி, “”பெருமானே, தங்கள் அருளால் நாங்கள் ஆயகலைகள் அறுபத்து நான்கில் பலவற்றைக் கற்றிருக்கிறோம். மீதமுள்ள கலைகளையும் குறைவறக் கற்க விரும்புகிறோம். எங்களுக்கு அக்கலைகளைக் கற்பிக்க நல்லாசிரியர் ஒருவரைத் தந்தருள வேண்டும்” என வேண்டிக்கொண்டனர்.

வித்யாதரர்களின் குறை தீர்க்க திருவுளம் கொண்ட சிவபெருமான், “”உங்கள் குலத்தைச் சேர்ந்த ஏமவருணன் என்பவன் மேருமலைச் சாரலில் எம்மை நோக்கித் தவம் செய்துகொண்டிருக்கிறான். அவனுக்கு யாம் ஒரு மகனை அருள்வோம். நீங்கள்  விரும்பியபடி அவன் உங்களுக்கு ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்பிப்பான். நீங்கள் அவனிடம் கற்றுணர்ந்து உய்வீர்களாக” என்று கூறி அருளினார்.

சிவபெருமான் தேவாங்கரை மனதில் எண்ணினார். ஈசனின் அழைப்பை உணர்ந்த தேவாங்கர் கயிலை சென்று சிவபெருமான் திருமுன் வணங்கி நின்றார். ஈசன் தேவாங்கரை நோக்கி, “”தேவலனே, நீ மேருமலைச் சாரலில் தவம்செய்து கொண்டிருக்கும் ஏமவருணன்முன் குழந்தையாகத் தோன்றி, வளர்ந்து, வித்யாதரர்களுக்கு அவர்கள் விரும்பியபடி அறுபத்து நான்கு கலைகளையும் கற்பிப்பாயாக” என்று பணித்தார்.

ஈசனின் அருட்கட்டளையை ஏற்று ஆமோத நகர் திரும்பிய தேவாங்கர் தன் புதல்வர்களிடம் ஈசன் தனக்கிட்டுள்ள பணியினையும், அதை நிறைவேற்றுவதற்காகப் பிரிந்து செல்லவேண்டியிருப்பதையும், நாட்டு மக்கள் நலன் கருதி அவர்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளைப் பற்றியும் அறிவுரைகள் வழங்கி, தன் மனைவி யருக்கும் சமாதானம் கூறி, தனது தூல உடலை சிவலிங்க வடிவில் ஆமோத நகரில் விட்டுவிட்டு இறைவன் கட்டளையை நிறைவேற்ற விண்ணுலகம் சென்றார்.

தேவாங்கரின் மூத்த குமாரன் திவ்யாங்கன் தந்தையின் லிங்க வடிவம் இருந்த இடத்தில் கோவில் ஒன்றை எழுப்பி தினசரி தவறாமல் பூஜைகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகளைச் செய்தான். தன் சகோதரர்கள் துணையுடன் ஆமோத நகரை நீதி வழுவாமல் நல்லாட்சி செய்துவந்தான்.

வித்யாதர உலகம் சென்ற தேவாங்கர் தவம்செய்துகொண்டிருந்த ஏமவருணன் முன்பு குழந்தையாகத் தோன்றினார். தவம் கலைந்து எழுந்த ஏமவருணன் தன் முன்னே அழகிய ஆண் குழந்தை ஒன்று இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தான். சிவபெருமான் அருளால்தான் அக்குழந்தை தனக்குக் கிடைத்தது என்றெண்ணி குழந்தையைத் தன் மனைவியிடம் எடுத்துச் சென்றான். குழந்தைக்காக ஏங்கிக்கொண்டிருந்த ஏமவருணனின் மனைவி சந்திரமுகி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். குழந்தைக்கு கமலாட்சன் என்று பெயரிட்டு அதை அன்புடனும் பண்புடனும் வளர்த்தனர்.

வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷத்துகள், கலைகள் என அனைத்திலும் தேர்ச்சி பெற்றுசகலகலா வல்லவனாக விளங்கிய கமலாட்சன், இயல்பாகவே தெளிந்த அறிவும், சொல்வண்மையும் பெற்றிருந்தான். இறைவனின் ஆணைப்படி வித்யாதரர்களுக்கு அவர்கள் விரும்பிய வண்ணம் நிறைவாகக் கலைகளைக் கற்பித்தான்.

ஈசன் தனக்கிட்ட பணியைச் சரிவரச் செய்துமுடித்து, தான் பிறவி எடுத்ததன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்ட திருப்தியுடன் கமலாட்சன் என்ற தேவாங்கர் மீண்டும் திருக்கயிலை சென்றார். 

ஈசனைப் போற்றி வாழ்த்திப் பாடுதலையும், யாழிசை மீட்டுதலையும் தன் பணியாகக் கொண்டிருந்தார்.

சிவபெருமானும் பார்வதிதேவியும் கமலாட்சனின் இனிய இசையை விரும்பிக் கேட்டுரசித்தனர். கமலாட்சனின் தெய்வீக இசை கேட்டு கயிலையில் இருந்த அனைத்து உயிரினங்களும் மயங்கிச் செயல் மறந்து நின்றன. இசைப் பணியைத் தொடர்ந்தபடி, அவர் பல புதிய பாடல்களையும், நல்ல நூல்களையும் இயற்றி, அவற்றை சிவபெருமான் முன்பாக அரங்கேற்றம் செய்தார். இறைவனைப் பாடித் துதித்துவந்த கமலாட்சனுக்கு அடுத்த பணி காத்திருந்தது. 

காந்தார நாட்டு கனகமாபுரத்தை சுருதகீர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அந்நகருக்கு அருகிலுள்ள சோலை ஒன்றில் வசித்துவந்த கோரன் என்ற அரக்கன் நகருக்குள் புகுந்து மன்னனையும் மக்களையும் மற்ற உயிரினங்களையும் துன்புறுத்தி வந்தான். அவனைஎதிர்த்துப் போரிட்டு வெல்ல முடியாத மன்னன், அமைதியான சோலை ஒன்றில் அமர்ந்துசிவபெருமானை எண்ணித் தவத்தில் ஈடுபட்டான். அவனது தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் அவன்முன் காட்சியளித்து “”வேண்டும் வரம் யாது?” என்று வினவினார்.

“”பெருமானே, என் நாட்டிற்குள் நுழைந்து என்னையும், என் நாட்டு மக்களையும் துன்புறுத்திவரும் அரக்கனிடமிருந்து எங்களைக் காப்பாற்றி அருளுங்கள்” என ஈசனிடம் வேண்டிக்கொண்டான் மன்னன்.

அவனது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், “”அரக்கனை வெல்லும் ஆற்றல் கொண்ட மகன் ஒருவனை உனக்கு யாம் அருளுவோம். அவன் உன்னையும், உன் நாட்டு மக்களையும் காப்பாற்றுவான்” என்று வரமருளி மறைந்தார்.

கமலாட்சனை குறிப்பால் உணர்த்தி அழைத்த சிவபெருமான், “”நீ கனகமாபுரத்து மன்னன்சுருதகீர்த்திக்கு மகனாகப் பிறந்து, அந்நாட்டு மக்களைத் துன்புறுத்தி வரும் கோரன் என்னும் அரக்கனைக் கொன்று அவர்களைக் காப்பாற்றுவாயாக” எனப் பணித்தார்.

சிவபெருமானின் ஆணைப்படி கமலாட்சன் சுருதகீர்த்தியின் மகனாக அவதரித்தான். அவனுக்குப் புட்பதத்தன் என்று பெயர் சூட்டி வளர்த்தனர். உரிய வயதில் கல்வி கற்பதற்காக அவனை ஒரு குருபீடத்திடம் ஒப்படைத்தனர். முற்பிறவிகளின் தேவாங்கரின் அம்சமும், வித்யாதர அம்சமும் கொண்டிருந்த புட்பதத்தன், அறிவிலும் ஆற்றலிலும் சிறந்துவிளங்கினான். கல்வி ஞானம் பெற்று அரண்மனை திரும்பிய புட்பதத்தனுக்குத் திருமணம் செய்து வைக்க மன்னன் சுருதகீர்த்தி முடிவு செய்தான்.

சிந்து தேச மன்னன் விருபாட்சன். அவன் மனைவி கீர்த்தசாலி. ஈசனின் திருவுளப்படி முற்பிறவியில் தேவாங்க மன்னனின் மனைவியாக இருந்த தேவதத்தையே இவர்களுக்குப் பெண் மகவாய்ப் பிறந்திருந்தாள். குழந்தைக்கு என்ன பெயரிடலாம் என மன்னனும் மற்றவர்களும் ஆலோசித்துக் கொண்டிருந்தபோது “தேவதத்தை எனப் பெயரிடுங்கள்’ என்று வானிலிருந்து அசரீரி ஒலித்தது. இறைவனின் ஆணையாக அதை ஏற்று குழந்தைக்கு தேவதத்தை எனப் பெயரிட்டு வளர்த்தனர். புட்பதத்தனுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்த சுருதகீர்த்தி தன் மகனுக்கு ஏற்ற அறிவும் அழகும் கொண்ட மணமகளைத் தேடினான். சிந்து தேச மன்னனின் மகளான தேவதத்தை தன் மகனுக்கு ஏற்றவள் என்பதை அறிந்தான். அனைவரும் சம்மதிக்க, அவர்கள் இருவருக்கும் நல்லதொரு நாளில் முறைப்படி திருமணம் செய்துவைத்தான். முன்னொரு பிறவியில் தேவாங்கர்- தேவதத்தையாய் இணைந்திருந்த இருவரும் இப்பிறவியில் புட்பதத்தனும், தேவதத்தையுமாய் அவதரித்து இல்லறத்தை இனிதாய் நடத்தி வந்தனர்.

புட்பதத்தன் அவதார நோக்கத்தின் காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்த மன்னன் சுருதகீர்த்தி, தன் மகனை அழைத்து கோரன் என்ற அரக்கனைப் பற்றியும் அவன் தொடர்ந்து நாட்டு மக்களைத் துன்புறுத்தி வருவதையும் அவனுடைய தொல்லைகளிலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் எனவும் கூறினான். தந்தையின் சொல்படி பெரும்படையுடன் சென்ற புட்பதத்தன் அரக்கர்களுடன் போரிட்டான். இருவருக்குமிடையே கடும் போர் நடந்தது. முடிவில் புட்பதத்தன் தனது பாணங்களால் அரக்கனின் தலையை வெட்டி வீழ்த்தினான். வெற்றிபெற்று நாடு திரும்பிய புட்பதத்தனை மன்னனும் மக்களும் ஆரவாரத்துடன் வரவேற்று வாழ்த்திப் பாராட்டினர். அதன்பின் நாட்டு மக்கள் எந்தக் குறையுமின்றி வாழ்ந்து வந்தனர்.

தவ வாழ்க்கையில் ஈடுபட எண்ணம் கொண்ட மன்னன் சுருதகீர்த்தி, புட்பதத்தனுக்கு முடிசூட்டி அவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தன் மனைவியுடன் வனம் சென்று தவம் மேற்கொண்டான்.

மக்களுக்கு நிறைவான நல்லாட்சி வழங்கிய புட்பதத்தன் நாடு முழுவதும் சிவாலயங்கள் எழுப்பி, நந்தவனங்கள் அமைத்து சிவவழிபாடு சிறந்தோங்கச் செய்தான். சிவவிரதங்களுள் முதன்மையான சிவராத்திரி விரதத்தை ஆகம முறைப்படி கடைப்பிடித்து வந்த புட்பதத்தன், நாட்டு மக்களையும் அவ்விரதத்தை மேற் கொள்ளச் செய்தான்.

ஒரு சிவராத்திரி நாளன்று புட்பதத்தன் செய்த பூசனையை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் அம்பிகையுடன் ரிஷப வாகனத்தில் காட்சி அளித்து அவனுக்கு விரும்பும் வரம் தருவதாகக் கூறினர். புட்பதத்தன், “”ஐயனே, நானும் எனது மனைவியும் தினந்தோறும் தவறாமல் திருக்கயிலை வந்து தங்களையும், அம்மை பார்வதிதேவியையும் கண்டு தரிசித்து வழிபாடு செய்யவேண்டும். அதற்குத் தாங்கள் அருள்புரிய வேண்டும்” என வேண்டிக் கொண்டான். 

சிவபெருமானும் அவ்வாறே அருளினார்.

தான் விரும்பிய வரம் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்த புட்பதத்தனுக்கு அந்த மகிழ்ச்சி நிலைத்ததா? புட்பதத்தன் பெற்றது வரமா? சாபமா?
 

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2013/june/devanku-puranam.jpg

           தேவலர் சகர நாட்டின் தலைநகரான ஆமோத நகரை நல்லாட்சிசெய்து வந்தார். சிவபெருமான் தான் முடிவு செய்திருந்தபடி தேவலர்- தேவதத்தை திருமணத்தை நடத்த திருவுளம் கொண்டு சப்தரிஷிகளை மனதில் எண்ணினார். ஈசனின் உளக்குறிப்பை உணர்ந்த முனிவர்கள் சிவபெருமான் முன்பு சென்று அவர் திருவடிகளை வணங்கி நின்றனர்.

சிவபெருமான் அவர்களை நோக்கி, “”முனிவர்களே, தேவாங்கனுக்கு சூரியதேவனின் தங்கை தேவதத்தையை மணம் முடிக்க எண்ணியுள்ளோம். நீங்கள் சூரிய லோகம் சென்று, சூரிய தேவனிடம் திருமணத்திற்கு ஒப்புதல் பெற்று முகூர்த்த நாளையும் குறித்து வாருங்கள்” என்று கூறினார்.

முனிவர்கள் சிவபெருமானை வணங்கி விடை பெற்று சூரிய லோகம் சென்றனர். தங்களை சிறப்பாக வரவேற்று உபசரித்த சூரியனிடம், தாங்கள் வந்த விவரத்தை முனிவர்கள் கூறினர். “இத்திருமணம் நடைபெறுவது எனது பாக்கியமே’ என்று கூறி தனது

ஒப்புதலைத் தெரிவித்த சூரிய தேவன், முகூர்த்த நாள் குறிக்க முனிவர்களை பிரம்ம தேவனிடம் அழைத்துச் சென்றார். அவர்கள் பிரம்மதேவனை வணங்கி விவரத்தைக் கூற, அவர்கள் வேண்டுதலை மகிழ்வுடன் ஏற்று, வைகாசி மாதம், பூர்வ பட்சம், சப்தமி திதி, புதன்கிழமை ஆறு நாழிகைக்குமேல் முகூர்த்த நாள் என்று குறித்துக் கொடுத்தார் பிரம்மா.

அதன்பின் முனிவர்கள் கயிலை சென்று, சூரியதேவன் ஒப்புதல் அளித்ததையும், தாங்கள் முகூர்த்த நாள் குறித்து வந்திருப்பதையும் சிவபெருமானிடம் கூறி, தாங்கள் கொண்டு வந்திருந்த முகூர்த்த ஓலையை அவரிடம் ஒப்படைத்துவிட்டுத் தங்கள் இருப்பிடம் சென்றனர்.

சூரிய தேவன் தனது அமைச்சர் வீரமார்த்தாண் டனை அழைத்து, திருமணத்திற்கு முகூர்த்த நாள் குறித்திருக்கும் செய்தியை ஆமோத நகர மன்னனும் மணமகனுமான தேவலரிடம் தெரிவித்து, மண விழாவிற்குத் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே சூரிய லோகம் வருமாறு அழைப்பு விடுத்து வரும்படி அனுப்பினார். அதன்படியே அமைச்சர் ஆமோத நகர் சென்று தேவல மன்னனிடம் செய்தியைத் தெரிவித்துவிட்டு சூரிய லோகம் திரும்பினார்.

சூரிய லோகத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டன. சூரிய தேவன் தூதுவர்கள் மூலம் சிவபெருமான், திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள், முனிவர்கள் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பினார். திருமணம் குறித்து தேவலர் மூவுலகத்தார்க்கும் திருமுகம் அனுப்பி அழைப்பு விடுத்தார்.

தேவலருடன் திருமணத்திற்குச் செல்ல பலநாட்டு மன்னர்களும் ஆமோத நகர் வந்தடைந்தனர். மன்னர்கள் புடைசூழ, மங்கல வாத்தியங்கள் முழங்க, தேவலர் தேரில் அமர்ந்து சூரிய லோகம் சென்றார்.

மும்மூர்த்திகள் முதல் தேவர்கள், ரிஷிகள், மன்னர்கள் என பலரும் திருமணத்திற்குத் திரண்டு வந்திருந்தனர்.

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2013/june/devanku-puranam1.jpg

சூரிய தேவன் மணமகனைத் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தார். தேவ மாதர்கள் புடைசூழ தேவதத்தையும் அழைத்துவரப்பட்டாள். மணமக்கள் இருவரும் ஒருவருக் கொருவர் ஈடுகொடுப்பதுபோல் அழகிய தோற்றத்தினராய் காட்சி அளித்தனர்.

மங்கல வாத்தியங்கள் முழங்க, வேத கீதங்கள் இசைக்க, குறிப்பிட்ட சுபமுகூர்த்தத்தில் தேவதத்தைக்கு தேவலர் மங்கலநாண் பூட்டினார்.

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களை மலர் தூவி வாழ்த்தினர்.

திருமணம் முடிந்தபின் சூரிய தேவன் அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்து விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களையும், ரத்தினப் பேழையில் தாம்பூலமும் கொடுத்து விடை கொடுத்தனுப்பினார்.

தேவாங்க மன்னர் தான் கொண்டு வந்திருந்த ஆடைகளை மும்மூர்த்திகள், அவர்களின் தேவியர், தேவர்கள், மன்னர்கள் என வந்திருந்தவர்கள் அனைவருக்கும் அவர்கள் மனம் மகிழ வழங்கினார். கால பைரவருக்கும் ஒரு அழகிய ஆடையை அளித்தார். அதைப் பெற்றுக்கொண்ட பைரவர் தேவலரைப் பார்த்து, “”எல்லாருக்கும் நல்ல அழகிய ஆடைகளைக் கொடுத்துவிட்டு எனக்கு மட்டும் மீதமிருந்த கிழிசல் ஆடையைக் கொடுத் திருக்கிறாயே” என்று கூறி அதைக் கிழித்தெறிந்துவிட்டு, “”எனக்கு வேறு ஒரு நல்ல ஆடை கொடு” என்று கேட்டார்.

அன்புடன் தான் அளித்த ஆடையை காலபைரவர் கிழித்தெறிந்ததால் வருத்தமடைந்த தேவலர் பைரவருக்கு வேறு ஆடை தர மறுத்துவிட்டார். உடனே பைரவர் சிவபெருமானிடம் சென்று தேவலர் தனக்கு நல்ல ஆடை கொடுக்க மறுக்கும் விவரத்தைக் கூறினார்.

சிவபெருமான் தேவலரை அழைத்து நடந்தவற்றைக் கேட்டறிந்து, கால பைரவர்மீது கோபம்கொண்டு, “”உனக்குக் கொடுத்த ஆடையை மதிக்காமல் அதை நீ கிழித்தெறிந்துவிட்டாய். எனவே இனிமேல் நீ கிழிந்த ஆடைகூட இல்லாமல் நிர்வாணமாய் இருக்கக்கடவது” எனச் சபித்தார். சாபம் பெற்ற பைரவர் மனம் வருந்தி திருமண மண்டபத்தை விட்டுத் தன் இருப்பிடம் சென்றார்.

திருமணத்திற்குப்பின் சில நாட்கள் தேவலரும் தேவதத்தையும் சூரியலோகத்தில் விருந்தினராய் இன்புற்றிருந்தனர். அதன்பின் தேவலர் தன்னுடன் வந்திருந்த மன்னர்களும், படைகளும் புடைசூழ தேவதத்தையை அழைத்துக்கொண்டு ஆமோத நகரம் சென்றார். மணமக்களுக்கு நாட்டு மக்கள் சிறப்பான வரவேற்பளித்து மகிழ்ந்தனர். திருமணத்திற்குப் பிறகு மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் ஈடுபட்டார் தேவலர். மக்கள் தத்தம் நெறியில் நின்றொழுகினர். முப்பத்திரண்டு அறங்களும் செழித்தன. சிற்றரசர்கள் செலுத்திய திரை நாட்டை வளம் கொழிக்கச் செய்தது.

தேவதத்தைக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளுக்கு திவ்யாங்கன், விமலாங்கன், தவளாங்கன் என பெயர் சூட்டி, உரிய வயதில் அனைத்துக் கலைகளையும் கற்பித்தனர். அவர்கள் வாலிப வயதை எட்டியதும், சூரிய தேவனின் புதல்விகள் மூவரையும் மணம் முடித்தனர். திவ்யாங்கன் பிரபையையும், விமலாங்கன் பத்மாட்சியையும், தவளாங்கன் கமலாட்சியையும் மணந்தனர். தேவாங்க மன்னர் தன் மூத்த புதல்வன் திவ்யாங்கனுக்கு முடிசூட்டி ஆட்சிப் பொறுப்பை வழங்கினார்.

தேவாங்கரின் நாகலோக மனைவி சந்திரரேகைக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

சுதர்மன் என்று பெயரிட்டு வளர்த்தனர். சுதர்மன் அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்று வல்லவனாகத் திகழ்ந்தான். அச்சமயத் தில் சூசைத்தீவை ஆண்ட மன்னன் சூரசேனன் ஆமோத நகர்மீது படையெடுத்து வந்தான். தேவாங்கர் பெரும்படையுடன் சென்று சூரசேனனைக் கொன்று சூசைத்தீவைக்  கைப்பற்றி அந்நாட்டிற்கு தன் மகன் சுதர்மனையே மன்னனாக்கினார். சுதர்மனுக்கு அவந்தி நாட்டு மன்னன் மகள் புட்கலையைத் திருமணம் செய்து வைத்தார். புதல்வர்களின் ஆட்சியின்கீழ் நாடு செழிப்புற, தேவாங்கர் மனம் நிறைந்தார்.

தேவாங்கர் அன்புடன் அளித்த அற்புதமான ஆடைகளை அணிந்த தேவர்கள், ஆடையின்றி இருந்த அரக்கர்களை நிர்வாணிகள் என்று கேலி செய்தனர். இதனால் கோபம் கொண்ட அரக்கர்கள் தங்கள் மன்னன் வச்சிரதந்தனிடம்  சென்று, “”அரசே, தேவர்கள் வண்ண வண்ண ஆடைகள் அணிந்து எங்கள் முன்வந்து நிர்வாணிகள் என்று கேலி செய்து இகழ்கிறார்கள்” என்று கூறினர். இதனைக் கேட்ட வச்சிர தந்தனுக்கு தனது இனத்தாரை இகழ்ந்து பேசியவர்களைப் பழிவாங்க வேண்டுமென்ற ஆவேசம் ஏற்பட்டது.

வச்சிரதந்தன் தன் சகோதரர்கள் புலிமுகனையும், சர்ப்பநாவனையும் அழைத்து அவர்களுடன் ஆலோசனை செய்தான். தேவர்களுக்கு மட்டும் ஆடைகள் வழங்கப் பணித்த சிவபெருமான் மனதைக் கலங்கச் செய்வதற்கேற்ற வகையில் என்ன செய்யலாமென யோசித்தனர்.

“”தேவலோகம் சென்று முதலில் தேவேந்தி ரனை அழித்துவிட்டு, அவனுக்குத் துணை நிற்கும் பிரம்மா, விஷ்ணு ஆகியோரை வெல்லவேண்டும். இதனைக் கண்டு ஈசன் கலக்க மடைவார்” என வச்சிரதந்தன் கூறினான். தம்பிகள் இந்த யோசனையை ஏற்கவில்லை.

“”அண்ணலே, தேவேந்திரனை வெல்வது எளிது. ஆனால் தேவர்களுக்கு உதவி செய்யும் திருமாலை வெல்வது எளிதல்ல. எனவே, அதற்கு முன்பாக சிவபெருமானை நோக்கித் தவமிருந்து வரங்கள் பெற்று, அதற்குப் பிறகு போருக்குச் சென்றால் வெற்றி அடையலாம்” என்று கூறினர். அவர்களது ஆலோசனையை வச்சிரதந்தன் ஏற்றான். அரக்கர்கள் மூவரும் சிவபெருமானை நோக்கி கடுந்தவத்தில் ஈடுபட்டனர்.

கேட்போருக்குக் கேட்கும் வரம் அருளும் சிவபெருமான், அரக்கர்களின் தவத்தை மெச்சி அவர்கள்முன் தோன்றி “”வேண்டும் வரம் யாது?” என்று கேட்டார். அரக்கர்கள், “”காலம் முழுவதும் சூரியன் தோன்றாமல் உலகம் எப்போது இருளில் இருக்கவேண்டும்” என வேண்டினர். அரக்கர்களின் வஞ்சக மனதை உணர்ந்திருந்த சிவபெருமான், “”சூரியன் உதிக்காவிடில் விண்ணுளோரும், மண்ணுளோரும் வாழமுடியாது. உயிர்கள் இயங்காமல் போய்விடும். இதனை விடுத்து வேறு வரம் கேளுங்கள்” என்றார்.

“”பெருமானே, ஓராண்டு காலமாவது உலகம் இருளில் இருக்குமாறு அருள்புரிய வேண்டும்” என அரக்கர்கள் வேண்டினர். சிவபெருமான் அவ்வாறே வரமருளி மறைந்தார்.

அப்போதே உலகம் இருண்டது.

கேட்ட வரம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைந்த அரக்கர்கள் தங்கள் நகரான வீரமகேந்திரபுரி சென்றனர். வச்சிரதந்தன் தூதுவர்களை அனுப்பி எட்டுத் திக்கிலும் வாழும் தமது குலத்தாரை அழைத்துவரச் செய்தான். அனைவரும் வீரமகேந்திரபுரியில் கூடினர். வச்சிரதந்தன் தன் தம்பியர், புதல்வர்கள் மற்றும் நால்வகைப் படையினருடன் தேவலோகம் சென்று அமராவதி நகரை முற்றுகையிட்டான்.

அரக்கர்களின் போர்ப்பறை கேட்ட தேவேந்திரன், பெரும்படையுடன் சென்று அவர்களை எதிர்த்துப் போரிட்டான். தேவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அரக்கர்கள் சிதறி ஓடினர். வச்சிரதந்தன் அவர்களைக் கட்டுப்படுத்தி தானே தலைமை ஏற்றுப் போர் செய்யத் தொடங்கினான். இந்திரனுக்கு நிகரான ஆயுதங்களைப் பயன்படுத்தினான். அரக்கர் கூட்டம் ஆவேசமாகப் போரிட்டு தேவர்களைத் தோற்றோடச் செய்தது.

அரக்கர்கள் வெற்றிக்களிப்புடன் தங்கள் நகரம் சென்றனர். தோல்வியுற்ற தேவேந்திரன் அரக்கர்களை வெல்வதற்கான உதவிகளையும் ஆலோசனைகளையும் பெற மற்ற தேவர்களுடன் கயிலை சென்று ஈசனைப் பணிந்தனர்.

சிவபெருமான் தேவாங்க மன்னனை மனதில் எண்ணினார். இறைவன் திருக்குறிப்பை உணர்ந்த தேவாங்கர் ஈசன்முன் தோன்றி பணிந்து வணங்கினார். ஈசன், “”தேவர்களைத் துன்புறுத்தும் அரக்கர்களைப் போரிட்டு அழித்து வா” என்று தேவாங்கரைப் பணித்தார்.

தேவாங்கர் தேவேந்திரனை நோக்கி, “”தேவராஜனே, இனி நீ அஞ்ச வேண்டாம். நீ உன் படைகளுடன் அமராவதி நகர் செல். நான் ஆமோத நகர் சென்று நால்வகைப் படைகளுடன் வருகிறேன்” என்று கூறித் தன் நாடு சென்றார்.

பின்னர் தேவாங்கர் படையும், தேவர்கள் படையும் ஒன்றுசேர்ந்து வச்சிரதந்தன் இருப்பிடம் சென்றனர். இருவரிடையே போர் மூண்டது. வச்சிரதந்தன் படை தோல்வியுற்றது.

தேவாங்க மன்னரால் தோற்கடிக்கப்பட்ட வச்சிரதந்தன் அவமானத்துடன் வீரமகேந்திர புரம் அடைந்தான். அரக்கர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். வச்சிரதந்தனின் தம்பி வியாக்ரமுகன், “”மானிடனான தேவாங்கனிடம் தோற்றது நம் குலத்துக்கே அவமானம். நானே போர் முகம் சென்று தேவாங்கனுடன் போர் செய்து, அவனை அழித்து அசுர குலத்திற்கே பெருமை தேடித் தருவேன்” என்று சூளுரைத்தான்.

வியாக்ரமுகனுக்கு ஆசி கூறிய வச்சிரதந்தன் அவனைப் பெரும் படையுடன் போருக்கு அனுப்பி வைத்தான். பலவிதமான ஆயுதங்களைக் கொண்டு தேவாங்கரை கடுமையாக எதிர்த்துப் போரிட்ட வியாக்ரமுகன், முடிவில் தேவாங்கரின் அம்புகளால் தலை துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்தான். வியாக்ரமுகன் வீழ்ந்த செய்தியைக் கேட்ட வச்சிரதந்தன் மிகவும் துயருற்று, தன் தம்பியைக் கொன்ற தேவாங்கரைப் பழிவாங்காமல் விடமாட்டேன் என்று சீறியெழுந்து, மீண்டும் அரக்கர் படைகளைத் திரட்டிக்கொண்டு போர்க்களம் சென்றான்.

நீண்ட நேரம் நடைபெற்ற போரில் இருவர் படைகளுமே சேதமடைந்தன. போரை முடிவுக்குக் கொண்டுவர எண்ணிய தேவாங்கர் சிவபெருமானை தியானித்து, அவர் அளித்த விடைக்கொடிக்கு மந்திர பலம் ஊட்டி அதைப் பகைவர்கள்மீது ஏவினார். அக்கொடியிலிருந்து தோன்றிய புலி, கரடி, யானை, சிங்கம், பன்றி, யாளி, சரபம், பூதகணங்கள் ஆகியவை அரக்கர்களை வீழ்த்தின.

விடைக்கொடியின் ஆற்றலுக்கு ஈடுகொடுக்க முடியாத அரக்கர்கள் புறமுதுகிட்டு ஓடினர்.

போரில் தன்னுடைய சகோதரர்கள், புதல்வர் கள், மருமகன்கள் மற்றும் நெருங்கிய சகாக்கள் ஆகியோர் மடிந்ததை எண்ணி வச்சிரதந்தன் மிகவும் மனம் வருந்தினான்.

மந்திர சக்திகள் படைத்த மாயாவியான தன் நண்பன் வித்தையுத்சேனன் என்பவனிடம் தேவாங்க மன்னனின் வீரதீரத்தையும், அவனிடமுள்ள விடைக்கொடியின் ஆற்றலையும், அது போரில் ஏற்படுத்தும் சேதத்தையும் எடுத்து ரைத்து, “”அந்த விடைக்கொடி தேவாங்கனிடம் இருக்கும்வரை நாம் தேவாங்கனையும், அவன் துணை பெற்றிருக்கும் தேவர்களையும் வெல்ல முடியாது. மாயாவியான நீ தகுந்த வேடம் கொண்டு தேவாங்கனிடமிருந்து அக்கொடியைக் கவர்ந்து வரவேண்டும். கொடியைப் பயன்படுத்தி நாம் அவர்களை வென்றுவிடலாம்” என்று வச்சிரதந்தன் கூறினான்.

விடைக்கொடியைக் கவர்ந்து வருவதாக உறுதி கூறிய வித்தையுத்சேனன் வச்சிரதந்தனிடம் விடைபெற்றுச் சென்றான். விடைக்கொடியைக் கவர்ந்து வருவதற்கு மாயாவி செய்த மாயம் என்ன?

(தொடரும்)

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2013/may/deva-puranam.jpg

 

          தேவலரின் தெய்வீகப் பயணம் தொடர்ந்தது. பல நாட்கள் பயணித்து தேவலர் மயனின் இருப்பிடமான மேருமலையை அடைந்தார். மயன் அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தார்.

சிவபெருமான் தனக்கிட்டுள்ள பணியை மயனிடம் விவரித்த தேவலர், நெசவு செய்யத் தேவையான தறிப்பொருள்களைப் பெற்றுச்செல்ல வந்திருப்பதாகக் கூறினார். “”மூவுலகத்தார்க்கும் மானம் காக்க ஆடைகள் வழங்கும் தங்கள் பணி மிகவும் போற்றுதற்குரியது” என தேவலரைப் பாராட்டினார் மயன்.

கைதேர்ந்த தச்சுக் கலைஞர்களின் ஒத்துழைப்போடு அழகானதும், திடமானதுமான நெசவுக் கருவிகளை விரைவாகச் செய்துமுடித்தார் மயன். வைடூரியம் இழைத்த மரப்பலகைகள், தோற் கேடயங்கள், பலம் மிக்க பண்ணைகள், படமரங்கள், மரகத நாடா, பவளத்திரிகைகள், திருவட்டம், விடு வாய், உடை வாய் ஆகிய கருவிகளை தேவலரிடம் கொடுத்து, அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் விளக்கிக் கூறினார் மயன். தேவலரின் பாதுகாப்புக்காக கைவாள் ஒன்றையும், மூவுலகத்தாரும் சேர்ந்து ஒரே சமயத்தில் எதிர்த்தாலும் அவர்களை வெல்லக்கூடிய சக்திவாய்ந்த எட்டுவித பாணங்களையும் அவரிடம் அளித்தார்.

மயனுக்கு நன்றி கூறி மேருமலையிலிருந்து புறப்பட்ட தேவலர், ஆமோத நகர் சென்றடைந்தார். நல்லதொரு நாளில் நெசவுத் தொழிலைத் தொடங்க எண்ணிய தேவலர், மயன் அளித்த கருவிகளோடு மேலும் சில கருவிகளைத் தானே வடிவமைத்து தயார் செய்தார்.

தேவையான உபகரணங்கள் தயாரானதும் தேவலர் ஆடைகள் நெய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார். மங்கள நன்னாள் ஒன்றில் நெசவுத் தொழிலைத் தொடங்குவதற்குமுன் தன் குலதெய்வமான சௌடேஸ்வரியை மனமுருக தியானித்தார். தேவியும் தேவலர்முன் தோன்றி, “”தேவலனே, என்னை நீ நினைத்த காரணம் யாது?” என்று கேட்டாள்.

“”அம்மையே, சிவபெருமான் இட்ட கட்டளைப்படி ஆடைகள் நெய்யும் பணியைத் தொடங்க எண்ணியுள்ளேன். மூவுலகத்தார்க்கும் ஆடைகள் வழங்க வேண்டியிருப்பதால், நான் நெய்யும் ஆடைகள் ஒன்று பலவாகப் பெருகி தேவையான அளவு ஆடைகள் கிடைக்கச் செய்வதற்கும், ஆடைகள் பல வண்ணங்களில் அழகுற அமைவதற்கும் தாங்கள் அருள்புரிய வேண்டும்” என தேவியை வேண்டி நின்றார். 

தேவலரின் வேண்டுதலை ஏற்ற தேவி அவரது வலது கரத்தில் கங்கணம் ஒன்றை அணிவித்தாள்.

“”அன்பனே, இந்த கங்கணத்தை அணிந்துகொண்டு நெசவு செய்தால் நீ நினைத்தபடி வண்ணத்திலும் வடிவத்திலும் அழகிய ஆடைகள் தேவையான அளவு கிடைக்கும். 

அதுமட்டுமின்றி ஒன்று பலவாகவும் பெருகும்” என வாழ்த்தி மறைந்தாள். 

சுபமுகூர்த்த நன்னாள் ஒன்றில் தேவலர் நெசவுக் கருவிகளைத் தறியில் பூட்டி, தேவி அளித்த கங்கணத்தை அணிந்தபடி, திருமாலின் நாபிக்கமல நூலைக் கொண்டு ஆடைகள் நெய்யத் தொடங்கினார். கலைநயம் மிக்க அழகிய ஆடைகள் தயாராகிக் குவிந்தன. நேத்திர பந்தர், அமிர்த சந்திர பந்தர், அன்ன பந்தர், தாராவளிகள், மேகாவளிகள் என விதவிதமான ஆடை வகைகளைத் தயாரித்தார். தன்முன் குவிந்திருக்கும் ஆடைகளைக் கண்டு மனம் மகிழ்ந்த தேவலர், சிவபெருமான் தனக்கு  அளித்திருக்கும் பணியின் சிறப்பை உணர்ந்து இறைவனையும், அம்மையையும் மனதில் தியானித்து நன்றி தெரிவித்தார். 

தேவலோகம் சென்று தேவர்களுக்கான ஆடைகளைக் கொடுத்துவர முடிவு செய்தார் தேவலர். தனக்கு நூல்கொடுத்து உதவிய திருமாலுக்கு முதலில் ஆடைகளை அளித்து அவரது ஆசிகளைப் பெற்றுவர எண்ணி வைகுந்தம் சென்றார். பாம்பணையில் பள்ளிகொண்டிருந்த பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கும் அற்புதமான, அழகிய ஆடைகளை அளித்து அவர்கள் ஆசிகளைப் பெற்றார்.

வைகுந்தத்திலிருந்து விடைபெற்று சத்திய லோகம் சென்றார். பிரம்ம தேவனுக்கும், அவரதுதேவிக்கும் ஆடைகள் அளித்து பிரம்ம லோகத்திலுள்ள கின்னரர், கிம்புருடர், சித்தர், மகரிஷிகள் ஆகியோர்க்கும் ஆடைகள் வழங்கி ஆசிபெற்றார்.

பின்னர் பிரம்ம தேவனை அணுகி, “”ஐயனே, திருமால் எனக்களித்த நாபிக்கமல நூலைக் கொண்டு நான் ஆடைகள் தயாரித்து அனைவருக்கும் வழங்குகிறேன். எனக்குப் பிறகு உலகத்தார்க்கு ஆடைகள் நெய்து அளிப்பதற்கு என் சந்ததியினருக்கு நூல் எங்கிருந்துகிடைக்கும்? அவர்கள் எவ்வாறு நெசவுத் தொழிலைச் செய்வர்? எல்லாருக்கும் குறைவின்றிஆடைகள் நெய்தளித்து அவர்கள் சீரும் சிறப்புமாக வாழ வழிகூறி அருளுங்கள்” என வேண்டினார்.

“”தேவலனே, கவலற்க. திருமாலின் நாபிக்கமலத்தில் இருக்கும் மானி, அபிமானி என்ற இரண்டு பெண்கள் பூவுலகத்தில் பருத்திச் செடிகளாக முளைப்பார்கள். அச்செடிகளிலிருந்து கிடைக்கும் பஞ்சை நூலாக்கி உன் சந்ததியினர் ஆடைகள் நெய்து அனைவருக்கும் வழங்குவார்கள்.  உன் வம்சம் நெசவுத் தொழிலைச் சிறப்பாகச் செய்து புகழோடு வாழும்”  என்று வரமருளினார்.

பிரம்ம தேவனிடம் விடைபெற்றுப் புறப்பட்ட தேவலர், இந்திரலோகம் சென்று தேவேந்திரன் மற்றும் அங்குள்ளோர் அனைவருக்கும் ஆடைகள் அளித்து மேரு பர்வதம், மகேந்திர பர்வதம், மலைய பர்வதம், இமய பர்வதம், பாரிஜாத பர்வதம் போன்ற இடங்களுக்கும் சென்று, அங்குள்ளவர்கள் அனைவருக்கும் ஆடைகள் அளித்து அவர்களது ஆசிகளையும், அவர்கள் அளித்த பரிசுப் பொருள்களையும் பெற்றுக்கொண்டு ஆமோத நகரம் திரும்பினார்.

தேவல முனிவர் அளித்த ஆடைகள் தேவர்களின் அங்கங்களை அலங்கரித்ததால் தேவாங்கர் என்றும், அனைவருக்கும் வஸ்திரங்கள் வழங்கியதால் வஸ்திரகர்த்தர் என்றும் துதிக்கப்பட்டார்.

பூலோகவாசிகளுக்கு ஆடைகள் அளிக்க எண்ணிய தேவலர் முதலில் நாவலந்தீவு சென்று அந்நாட்டு மன்னனுக்கும் மக்களுக்கும் ஆடைகள் அளித்தார். நாவலந் தீவுக்கு அருகிலிருக்கும் இரவித்தீவு, சாகத்தீவு, கிரௌஞ்சத் தீவு, புட்கரத்தீவு முதலிய தீவுகளுக்குச் சென்று அங்குள்ள அனைவருக்கும் ஆடைகள் வழங்கினார். 

பின்னர் தேவலர் பாதாள லோகம் சென்று தக்கன், வாசுகி, கார்க்கோடகன், சங்கன் முதலிய நாகர்களுக்கும், அங்குள்ள நாக கன்னியர்க்கும் ஆடைகளை வழங்கினார். அனைவருக்கும் ஆடைகள் வழங்கிய தேவலர்மீது அன்பு கொண்ட நாகலோக மன்னன் அனந்தன், சில நாட்கள் தங்கள் விருந்தினராகத் தங்கிச் செல்லும்படி தேவலரை வேண்டினான். 

அதனை ஏற்ற தேவலர் அவனது அரண்மனையில் சில நாட்கள் தங்கினார்.

சிவமைந்தன் அம்சமாக விளங்கும் தேவலர்மீது நாகராஜனுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. தன் மகள் சந்திர ரேகையை தேவலருக்குத் திருமணம் செய்துகொடுக்க விருப்பம் கொண்டு, தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தான். நாகராஜனின் நட்பைப் பாராட்டி அவனது வேண்டுகோளுக்கு இசைவு தெரிவித்தார் தேவலர்.

தேவலருக்கும் சந்திரரேகைக்கும் திருமணம் செய்துவைத்த நாகமன்னன், அவர்களுக்குப் பல அரிய பொருட்களை சீதனமாகக் கொடுத்தான். ஆதிசேடன் மகளுடன் திருமண உறவு ஏற்பட்டதால் தேவலரின் சந்ததியினர் சேடர் என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படுவார்கள் என ஆதிசேடன் கூறினான். 

தேவலர் நாக மன்னனிடம் விடைபெற்று தன் மனைவி சந்திரரேகையுடன் நாடு திரும்பினார்.

ஆமோத நகர் சென்ற மணமக்களுக்கு நாட்டு மக்கள் சிறப்பான வரவேற்பளித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். 

மக்கள் நலன் கருதி நகரில் சில நாட்கள் தங்கியிருந்து ஆட்சியை கவனித்து வந்த தேவலர் சிவபெருமானுக்கு ஆடைகளை அளித்துவர விரும்பினார். ஈசனுக்கும் உமையவளுக்கும் அளிக்க நெய்து வைத்திருந்த அற்புதமான ஆடைகளை எடுத்துக்கொண்டு கயிலை சென்றார்.

சிவபெருமானும், பார்வதி தேவியும் ஒளிவீசும் ரத்தின சிங்காதனத்தில் அமர்ந்திருக்க, தேவரும், முனிவரும் இறைவனின் புகழைப் பாடிக் கொண்டிருந்தனர். தேவலர் தான் கொண்டு வந்திருந்த ஆடைகளை ஈசன் திருமுன்னர் வைத்து, “”பெருமானே, தங்கள் திருவருள் துணையால் இந்த அற்புதமான ஆடைகளை நெய்துள்ளேன். இவற்றைத் தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தாங்கள் இவற்றை ஏற்று அணிந்தருள வேண்டும்” என வேண்டினார். அவரது வேண்டுகோளை ஏற்ற சிவபெருமானும், பார்வதி தேவியும் அவ்வழகிய ஆடைகளை அணிந்து அருட்காட்சி தந்தனர். 

முருகன், வீரபத்திரர், நந்தியெம்பெருமான், ரிஷிகள், சிவகணங்கள் ஆகியோருக்கும் ஆடைகள்வழங்கி அனைவரின் பாராட்டுதல்களையும், ஆசியையும் பெற்றார் தேவலர்.

சௌடேஸ்வரி தேவிக்கு ஆடைகள் வழங்க எண்ணி தேவலர் அவளைத் துதித்தார். தேவி அவர்முன் தோன்றி அவர் அளித்த ஆடைகளைப் பெற்றுக்கொண்டு ஆசி கூறி மறைந்தாள். பின்னர் தேவலர் சிவபெருமான் திருமுன்னர் சென்றார். ஈசன் அவரைத் தனக்கு நிகரான ஆசனத்தில் அமரச் செய்தார். 

அப்போது தேவலோக மாதுக்களான அரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. அதனைக் காண கயிலைவாசிகள் சபையில் கூடியிருந்த னர். ஈசனுடன் அமர்ந்து தேவலரும் நடன நிகழ்ச்சியைக் கண்டுகளித்தார். நாட்டிய நிகழ்ச்சி முடிந்ததும் ஈசன் குறிப்பால் உணர்த்தியபடி தேவலர் நடன மாதுக்களுக்கு தான் கொண்டுவந்திருந்த ஆடைகளை வழங்கி அவர்களை மகிழ்வித்தார்.

சிவபெருமான் தேவலரை அழைத்து அவரிடம் சக்திவாய்ந்த தெய்வீக வாள் ஒன்றையும் இடபக் கொடியையும் கொடுத்து, “”இந்த வாளும் கொடியும் இருக்கும் வரை உனக்குப் போரில் தோல்வி ஏற்படாது. எந்நாளும் சீரும் சிறப்புமாய் வாழ்வாய்” என வாழ்த்தினார்.

தேவலர் சிவபெருமான் திருமுன் சென்று வணங்கி, “”பெருமானே, தங்கள் திருவுளப்படி திருமாலிடம் நூல் பெற்று ஆடைகள் நெய்து மூவுலகத்தோர்க்கும் கொடுத்து அவர்கள் மானத்தைக் காக்கும் பேறு பெற்றேன். ஆடைகள் நெசவு செய்தது போக மீதி இருக்கும் நூலை என்ன செய்வது?” என்று கேட்டார்.

“”மைந்தா, மீதமுள்ள நூலைக் கொண்டு யக்ஞோபவீத சூத்திரம், மாங்கல்ய சூத்திரம், கங்கண சூத்திரம், கடிசூத்திரம், சஞ்ஜாத சூத்திரம் ஆகியவற்றை உருவாக்கு. யக்ஞோபவீத சூத்திரத்தை தேவர்கள், அந்தணர்கள் ஆகியோருக்கும்; மாங்கல்ய சூத்திரத்தை கற்புடைய பெண்மணிகளுக்கும்; சஞ்ஜாத சூத்திரத்தை பிரசவ காலத்தில் இருக்கும் பெண்களுக்கும்; மற்றவற்றை பூணூல் அணியும் தகுதி உள்ளவர்களுக்கும் உரிய காலத்தில் மந்திரோபதேசத்துடன் கொடு” என பணித்தார். (இறைவன் அருளியபடி தேவலர் சூத்திரங்களைத் தயார் செய்து உரியவர்களுக்கு வழங்கினார். சூத்திரங்கள் வழங்கியதால் சூத்திர கர்த்தர் என்ற பெயரையும் பெற்றார்.)

தேவலர் ஆமோத நகர் செல்லும் வழியில் ஒரு அழகிய பூஞ்சோலையையும் அதன் நடுவே பூக்கள் நிரம்பிய தடாகம் ஒன்றையும் கண்டார். பயணக் களைப்பு தீர தடாகத்தில் நீராடி தியானம் செய்து முடித்து தடாகக் கரையில் அமர்ந்திருந்தார். அப்போது நடனமாது அரம்பையின் வடிவில் தேவலருக்கு சோதனை வந்தது.கயிலையில் நாட்டியமாடிய அரம்பை, சபையில் வீற்றிருந்த தேவலரின் பேரழகில் மயங்கி அவரை தனிமையில் சந்தித்து மகிழவேண்டும் என விருப்பம் கொண்டாள். பூஞ்சோலையில் தேவலர் தனித்திருப்பதை அறிந்து அவரைச் சந்திக்க அங்கு வந்தாள். தனக்கு அவர்மீது ஏற்பட்டிருக்கும் காதலை வெளிப்படுத்தினாள்.

அரம்பையின் காதல் தேவலருக்கு உடன்பாடில்லாத ஒன்றாக இருந்தது. பெண்மைக்குரிய வெட்கத்தைவிட்டு அவள் கெஞ்சியது அவள்மீது பரிதாப உணர்வையே ஏற்படுத்தியது. எனவே, “”எனக்குப் பெண்கள்மீது ஈடுபாடு கிடையாது. தேவலோகத்தில் உன்னை விரும்புபவர்கள் பலர் இருப்பார்கள். அவர்களிடம் சென்று உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்…” என்று அறிவுரை கூறினார்.

தன் வேண்டுகோளை தேவலர் மறுத்ததால் கோபம் கொண்ட அரம்பை, “”நீ என்றாவது ஒருநாள் போரில் பகைவரிடம் தோல்வியுற்று வருந்துவாயாக” என சபித்துவிட்டுச் சென்றாள். சிவபெருமான் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று என எண்ணிய தேவலர், பின்னொரு நாளில் இது நன்மையே தரும் என்ற சிந்தனையோடு மனம் கலங்காது ஆமோத நகர் சென்றடைந்தார். அரம்பையின் சாபம் பலித்ததா?
 

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2013/february/devangapuranam.jpg

நம் இந்துமத இலக்கியங்களுள் புராணங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பழைய வரலாறுகளே புராணங்கள் எனப்படுகின்றன. “எது தொன்று தொட்டு இன்று வரை பரவியிருக்கிறதோ அதுவே புராணம்’ என வாயு புராணம் கூறுகிறது.

ஆதியில் சிவபெருமானால் அருளப் பட்டவை புராணங்கள். சிவபெருமான் கூறியதை நந்தி கேட்டு, அதை சனத்குமாரருக்குக் கூற, அவர் வியாசருக்குக் கூறினார். வியாசரால் தொகுக்கப்பட்ட புராணங்கள் சூத முனிவரால் உலகினருக்கு  எடுத்துக் கூறப்பட்டன.

சிவபுராணங்கள் 10, விஷ்ணு புராணங்கள் 4, பிரம்ம புராணங்கள் 2, அக்னி புராணம், சூரிய புராணம் என புராணங்கள் 18.

“எப்பொழுதும் உண்மையைப் பேசு; தர்மத்தைச் செய்’ என்பதை, “ஸத்யம் வத தர்மம் சர’ என வேதம் கூறுகிறது. இத்தகைய வேதக் கட்டளைகளை- வேதம் கற்றோரும் மற்றோரும் நன்கு அறிந்து, அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்து உய்வதற்கு ஏற்றவகையில் புராணங்கள் சுவையான நீதிக்கதைகளால் விளக்குகின்றன.

“இறைவன் ஒருவனே, அவனே முதல்வன்’ என்பது சைவ சித்தாந்தக் கொள்கைகளுள் தலையாயது. சைவர்கள் முதல்வனை சிவனாகவும், அவன் ஆற்றலை அம்மையாகவும் வழிபடுகின்றனர்.

சைவ நெறியைப் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டு படைக்கப்பட்டது தேவாங்க புராணம். தேவர்களின் துயர் துடைக்க அவதரித்த தேவலரின் புகழ்பாடும் தேவாங்க புராணம், சிவ புராணங்களுள் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில் இடம் பெற்றுள்ளது. தேவாங்க குல மக்களின் குலதெய்வமான சௌடேஸ்வரி அம்மனின் புகழையும் பாடுகின்றது. சிவனிலிருந்து சக்தி வடிவெடுக்கும் அம்பிகையின்  அவதாரங்களில் ஒன்று சௌடேஸ்வரி அம்மன்அவதாரம். சக்தி வழிபாட்டின் சிறப்பும் சைவ நெறிகளுமே இப்புராணத்தில் உணர்த்தப்படுகின்றன.

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2013/february/devangapuranam1.jpg

மற்ற குலத்தாரின் மான சம்ரட்சணம், ஆன்மிக உயர்வு ஆகியவற்றுக்காக தெய்வீக சேவை புரிந்த குலம் தேவாங்க குலம். இக்குலத்தின் மூலகர்த்தர் தேவாங்கர் என்றழைக்கப்படும் தேவல முனிவர். துஷ்ட நிக்ரகம், சிஷ்ட பரிபாலனம் புரிவதற்காக பரம்பொருள் எடுத்த அவதாரமே தேவலர் அவதாரம்.

கோடி சூரியப் பிரகாசத்துடன் விளங்கும் திருக்கயிலையில், நவமணிகளால் இழைக்கப்பட்ட அரியாசனத்தில் சிவபெருமானும் பார்வதிதேவியும் வீற்றிருந்தனர். தேவர், அசுரர், கந்தர்வர், வித்யாதரர், கின்னரர், முனிவர், நாகர், இயக்ககர், சித்தர் ஆகியோர் சூழ்ந்திருந்து அம்மையையும், அப்பனையும் போற்றிப் பாடும் மங்கல இசை எங்கும் பரவி ஒலித்துக்கொண்டிருந்தது. முற்றுந்துறந்த முனிவர்கள் ஆங்காங்கே அமர்ந்து தவம்செய்து கொண்டிருந்தனர். புண்ணிய தீர்த்தங்களும் மலர் வாவிகளும் புனித மலைக்கு அழகு சேர்ப்பதுபோல் அமைந்திருந்தன.

நைமிசாரண்ய முனிவர்கள், தீர்த்தங்களுள் பெருமை மிக்கதான புஷ்கர தீர்த்தத்தில் நீராடி தங்கள் நித்திய கருமங்களை முடித்துவிட்டு தீர்த்தக்கரையில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்குவந்த சூத முனிவரை வணங்கி வரவேற்று தங்கள் வேண்டுகோள் ஒன்றை அவர்முன் வைத்தனர்.

நைமிசாரண்ய முனிவர்கள் பதினெண் புராணங்களையும் சூத முனிவர் சொல்லக்கேட்டு மகிழ்ந்திருக்கின்றனர். பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ள தேவாங்க முனிவரது சரிதத்தை முன்பொரு சமயம் சுருக்கமாகக் கேட்டறிந்திருந்த முனிவர்கள் அதனை விளக்கமாகக் கேட்க விருப்பம் கொண்டு, தங்கள் விருப்பத்தை சூத முனிவரிடம் பயபக்தியுடன் தெரிவித்தனர்.

அவர்கள் வேண்டுகோளை மகிழ்வுடன் ஏற்ற சூத முனிவர், “”கேட்பவர்கள் பாவத்தைப் போக்கி வீடுபேறளிக்கும் புண்ணிய சரிதத்தைக் கூறுகிறேன்; கேளுங்கள்” என்று கூறி, தேவலர் வரலாற்றை பக்தி நிறைந்த வார்த்தைகளால் சொல்லத் தொடங்கினார்.

எல்லாவற்றிற்கும் தலைவனான ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான் திருக்கயிலையில் ஒளி வீசும் அரியாசனத்தில் அமர்ந்திருந்தார். உலகைப் படைக்கத் திருவுளம் கொண்டு, மூன்றுவித நற்குணங்களுடன் தன் அருகில் அமர்ந்திருந்த அம்மையை ஈசன் அருள் பார்வை கொண்டு நோக்கினார். அம்மையின் ரஜோ குணத்தில் பிரம்மதேவனும், சத்துவ குணத்தில் திருமாலும், தமோ குணத்தில் உருத்திரனும் தோன்றினர்.

பிரம்மனைப் படைத்தல் தொழிலையும், திருமாலைக் காத்தல் தொழிலையும், உருத்திரனை அழித்தல் தொழிலையும் செய்யும்படி சிவபெருமான் பணித்தார். மும்மூர்த்திகளும் ஈசனின் ஆணையை ஏற்று, தங்கள் பணிகளை சிறப்புற நிறைவேற்றுவதாக உறுதி கூறி ஈசனிடம் விடைபெற்றுச் சென்றனர்.

சிவபெருமான் அருளியபடிபிரம்மன் படைத்தல் தொழிலைத் தொடங்கினார்.

திருவருளின் துணைகொண்டு பல உலகங்களையும், பூமியையும்; தாவரங்கள், விலங்குகள், பறவைகள், மலைகள், கடல் ஆகியவற்றையும் படைத்தார்.

பின்னர் மனுவைப் படைத்து தேவர், மானிடர், நாகர் ஆகியோர்க்கு மானத்தைக் காக்கும் ஆடைகளை நெய்து கொடுக்கும் தொழிலைச் செய்யும்படி அவருக்குக் கட்டளையிட்டார். பிரம்மன் தனக்கிட்ட பணியை மகிழ்வுடன் ஏற்ற மனு, காம்பிலி நகர் சென்று தன் கற்பனையில் தோன்றிய வண்ணம் அழகிய ஆடைகளை அவரவர் விருப்பத்திற்கேற்றபடி நெய்து கொடுத்தார்.

தன்னைப் படைத்த பிரம்மாவைப் பலவாறு போற்றி வணங்கிய மனு, பிரம்மாவைப் படைத்த சிவபெருமானிடம் மிகுந்த பக்திகொண்டு அவர் திருவடிகளுக்குத் தொண்டு செய்து வந்தார். நற்பண்புகளுடன் திகழ்ந்து தவ வாழ்க்கை வாழ்ந்த மனுவுக்கு சிவபெருமான் வீடுபேறு அருளினார்.

மனு வீடுபேறு எய்தியபின், மானங்காக்க ஆடைகளின்றி மூவுலகத்தாரும் கவலையுற்றனர். இலை, தழைகள், மரவுரி போன்றவற்றை அணிந்து ஆடைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.

அதற்கான மாற்றுவழிதேடி தேவர்கள் பிரம்மனை நாடிச் சென்றனர். சிவபெருமானே இதற்குத் தீர்வு காணக்கூடியவர் என்று கூறி, தேவர்கள் பின் தொடர திருக்கயிலை சென்றார் பிரம்மா.

தேவர்கள் சிவபெருமானைப் பணிந்து நின்றனர். “”எம் பெருமானே, மானங்காக்க ஆடைகளின்றித் துன்புறுகிறோம். வைதீக காரியங்களுக்கு உரிமை அளிக்கும் பூணூல் இல்லாமல் தெய்வீகம் இழந்து நிற்கிறோம். ஆடையும், பிரம்ம சூத்திரமும் வழங்க ஒரு மகாபுருஷனைத் தந்தருள வேண்டுகிறோம்” எனத் தங்கள் குறையை இறைவன்முன் வைத்தனர்.

தேவர்களின் குறைகளைக் கேட்ட சிவபெருமான் ஒரு கணம் மௌனமாக இருந்து தியானித்தார். சிவபெருமானின் இதயக் கமலத்திலிருந்து பேரொளிப் பிழம்பொன்று வெளிப்பட்டு நின்றது. அந்தப் பேரொளி மான்தோல், தண்டு, கமண்டலம், ஜடாமுடி, பவித்ரம், திருநீறு, உருத்திராக்கம், கங்கணம், முப்புரிநூல் ஆகியவற்றைத் தரித்த ஆணழகனாய் நின்றது. தேவர்கள் துயர்துடைக்க நற்பண்புகளின் தோற்றமாய் நின்ற அம் மகாபுருஷனை, ஈசன் தேவலர் என்ற பெயரிட்டு அழைத்தார்.

பணிவுடன் வணங்கி நின்ற தேவலரை நோக்கி, “”தேவலனே, இவ்வுலகுக்கு நீ ஆற்றவேண்டிய பணி ஒன்றுள்ளது. அதற்காகவே உன்னை அழைத்தோம். நீ திருமாலிடம் சென்று, அவர் உந்திக் கமல நூலைப் பெற்று ஆடைகள் நெய்து அனைவருக்கும் கொடுப்பாயாக. நீ அளிக்கும் ஆடைகள் தேவர்களின் அங்கங்களை அலங்கரிப்பதால் தேவாங்கன் என்ற பெயரையும் நீ பெறுவாய்” என்றருளி, மேருமலைக்குத் தென் பாகத்திலுள்ள ஆமோத நகர் சென்று நல்லாட்சி செய்து வரும்படி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

(சிருஷ்டி தொடங்குவதற்குமுன் அண்ட சராசரங்கள் எல்லாம் தேவல சொரூபமாய் இருந்தது. சிவ சகஸ்ராரத்தில் வியாபித்திருக்கும் ஜோதி தேவலப் பிரம்மமே. உலகத்தின் தோற்றம், காப்பு, ஒடுக்கம் ஆகியவற்றுக்கெல்லாம் தேவலரே காரணகர்த்தா. தேவலப் பரம்பொருள் அவ்வப்போது, சிவபெருமானின் சகஸ்ராரத்திலிருந்து வெளிப்பட்டு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் ஆடைகள் தந்து உடனே மறைந்து விடும். இது கல்பங்கள்தோறும் நடந்துவரும் சம்பவம். இதுபோன்றே ஒரு கல்பத்தில் நிகழ்ந்ததாக தேவாங்க புராணம் தொடங்கு கிறது.)ஒரு கல்ப காலத்தின் துவக்கத்தில் தேவர்களும் முனிவர்களும் ஆடை, பூணூல் ஆகியவற்றுக்காக சிவபெருமானைப் பிரார்த்தித்தனர். சிவபெருமான் தேவலப் பரம்பொருளை தியானித்தார். பரம்பொருள் தேவல முனிவர் வடிவம் தாங்கி சிவ சகஸ்ரார கமலத்திலிருந்து வெளிப்பட்டு அங்கிருந்தோர் அனைவருக்கும் ஆடையும் பூணூலும் வழங்கியது.

தேவர்களுக்கு உபகாரமாய் இருந்த தேவல முனிவர், மானிடராகப் பிறந்து மானிடர்கள் அனைவருக்கும் நிரந்தரமாக உபகாரம் செய்ய விரும்பினார். அதனைச் செயல்படுத்த காண்ட ரிஷி மூலமாக ஒரு லீலையை நிகழ்த்தினார்.

அனைவருக்கும் ஆடையும், பூணூலும் வழங்கிய தேவலர் காண்ட ரிஷிக்கு மட்டும் எதையும் கொடுக்கவில்லை. காண்ட ரிஷி கேட்டதற்கு, “”உமக்கு இன்று இல்லை; நாளை தருகிறேன்” என்று தேவலர் கூறினார். அதனால் கோபம் கொண்ட ரிஷி, “”எல்லாருக்கும் ஆடையும் பூணூலும் வழங்கிய நீ எனக்கு மட்டும் இல்லையென்று கூறியதால் பூலோகத்தில் மானிடனாகப் பிறப்பாய்” எனச் சாபமிட்டார்.

தேவல முனிவர், “”எல்லா உயிர்களும் என் சொரூபமே. எனக்கும் மானிடர்க்கும் எந்த பேதமும் இல்லை. ஆகவே மானிடராகப் பிறப்பது மானிடர்க்கு உபகாரமாக அமையும் என்பதால், நீர் இட்ட சாபத்தை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறி, காண்ட ரிஷியின் கோபத்தை மேன்மேலும் தூண்டி, ஏழு அவதாரங்கள் எடுக்க சாபம் பெற்றார். அதில் முதல் அவதாரமே தேவல முனிவர் அவதாரம். (ஏற்கெனவே, திருமாலின் உந்திக் கமல நூலில் ஆடைகள் நெய்து அனைவர்க்கும் வழங்க சிவபெருமான் பணித்தபோது, தேவலர் ஆறு பிறவிகள் எடுத்து ஏழாவது பிறவியில் சொர்க்கம் செல்வார் என ஆசி வழங்கியிருந்தார்.)

சிவபெருமான் ஆணையை ஏற்று அவரது ஆசிகளுடன் புறப்பட்ட தேவலர், சௌடேஸ்வரி அம்மையை வணங்கி அவளருள் வேண்டி நின்றார். “”நீ மேற்கொண்டுள்ள நற்பணிக்கு எனது ஆசிகள். உனக்கு இடர் வரும்போது என்னை தியானம் செய். நான் தோன்றி உன் இடர்களைக் களைந்து உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கூறி ஆசீர்வதித்தாள்.

தேவலர் திருப்பாற்கடல் நோக்கிப் புறப்பட்டார். திருப்பாற்கடலுக்குச் சற்று முன்னதாக பழ மரங்களும், நறுமணங் கமழும் பூஞ்செடிகளும் சூழ்ந்த ஒரு அழகிய ஆசிரமத்தைக் கண்டார். அதன் இயற்கைச் சூழல் தேவலரின் மனதை ஈர்த்தது. தனது குறிக்கோள் நிறைவேறத் திருமாலை நோக்கித் தவமியற்ற அதுவே தகுந்த இடம் எனத் தேர்ந்து, அங்கமர்ந்து பல நாட்கள் கடுந்தவம் செய்தார்.

தேவலரின் தவத்தில் திருப்தி கொண்ட திருமால் தேவலர்முன் காட்சி அளித்தார். “”தேவலனே, உன் பக்திக்கு மெச்சினோம். வேண்டும் வரம் கேள்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

“”ஜகத்ரட்சகனே, சிவபெருமானின் ஆணைப்படி தங்கள் நாபிக்கமல நூலைப் பெற்றுச் செல்ல வந்துள்ளேன். அந்த நூலைக் கொண்டு திரிலோகவாசிகளின் மானங்காக்க ஆடைகள் நெய்து தரப் பணிக்கப்பட்டுள்ளேன். தாங்கள் அருள்கூர்ந்து நாபிக்கமல நூலைத் தந்தருள வேண்டும்” என தேவலர் திருமாலைப் பணிந்து வணங்கி தன் வேண்டுதலை முன்வைத்தார்.

“”தேவாங்கனே, பூவுலகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே பயன்பாடின்றி இருந்துவரும் இந்த நூலை இதுவரை காப்பாற்றி வந்துள்ளேன். இனிமேலாவது இந்த நூல் நல்ல காரியங்களுக்குப் பயன்படட்டும். நூலைப் பெற்றுச் சென்று உன் பணியைத் தொடர்வாயாக” என ஆசி கூறி நாபிக் கமல நூலைத் தேவலரிடம் அளித்தார்.

தேவலர் திருமாலிடம் விடை பெற்றுப் புறப்பட்டபோது, “”தேவலனே, நீ பெற்றுச் செல்லும் இந்நூலைக் கவர முனிவர் வேடம் பூண்ட அரக்கர்கள் முயற்சிப்பர். அவர்களை வெற்றிகொள்ள உதவியாக சக்கரப் படை ஒன்றினையும் உனக்கு அளிக்கிறேன். இதனையும் பெற்றுச் செல்” என்று கூறி, தன் சக்கரப்படை ஒன்றினை தேவலரிடம் வழங்கினார்.

திருமாலிடமிருந்து விடைபெற்று தன் பயணத்தைத் துவங்கிய தேவலர் சமுத்திரக் கரையோரமிருந்த நாவலந்தீவை வந்தடைந்தார். கனி மரங்களும் மலர்ச் செடிகளும் சூழ்ந்த ஒரு பர்ணசாலையைக்கண்டு, அங்குள்ள முனிவர்களின் ஆசியைப் பெற விரும்பி அங்கு சென்றார்.

குடிலருகில் கையில் ஜெப மாலையுடன் முனிவர் ஒருவர் சீடர்கள் புடை சூழ அமர்ந்திருந்தார். முனிவரின் பாதங்களில் விழுந்து வணங்கிய தேவலர், தான் மேற்கொண்டுள்ள பணி செவ்வனே நடைபெற ஆசிகள் பெற வந்துள்ளதாகக் கூறினார்.

திருமாலிடமிருந்து நாபிக்கமல நூலைப் பெற்று வந்திருப்பதாகவும், அதனைக் கொண்டு ஆடைகள் நெய்யும் பணியை மேற்கொள்ளப் போவதாகவும் தேவலர் கூறியதைக் கேட்ட தவமுனிவர், “” உன்னிடமுள்ள நூல் மிகவும் புனிதமானது. கிடைத்தற்கரிய இந்த நூலை யாரேனும் அபகரித்துச் செல்ல முயற்சிக்கலாம். இன்றிரவு நீ இங்கு தங்கிச் செல். அதுவே உனக்குப் பாதுகாப்பானது” என்று கூறினார்.

திருமால் கூறியபடியே முனிவரும் நூலை பத்திரமாகக் கொண்டு செல்லவேண்டும் என்று கூறியதால், நூலின் பாதுகாப்பு கருதி அன்றிரவு ஆசிரமத்திலேயே தங்கினார். சீடர்கள் மத்தியில் உறங்கிக் கொண்டிருந்த தேவலர் திடீரெனக் கண்விழித்தார். ஆசிரமத்திற்குள் கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. தேவலரைச் சுற்றிலும் ஆயுதங்களோடு அரக்கர்கள் நின்றிருந்தனர்.

முனிவர்கள் ஒருவர்கூட கண்ணில் தென்படவில்லை. அரக்கர்கள் என்ன மாயம் செய்தனரோ என தேவலர் கவலையுற்றார்.

(தொடரும்)

 

Image: 
Categories: 
Share Share
Scroll to Top